Sunday, February 1, 2009

புதிய பூமி

புதிய பூமி"

கலகம் இல்லா
உலகம் காண்போம்;
"ஒன்றே குலம்-ஒருவனே தேவன்"
நன்றாய்மனம், மொழி,மெய்யால்
நடாத்தி காட்டுவோம்;
தாயும் ஒன்றே- தந்தையும்ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
படைத்தவன் ஒருவனுக்கே
பயந்துவிட்டால்....
படைப்பினம் யாவும்
வசமாகும் நம்மிடம்!!!
சமத்துவம்என்னும்
மரத்தினை வேரறுக்கும்
"சுயநல"க் கோடாரியைத்
தொட வேண்டா.
இவையெல்லாம்
இன்றே நடந்து விட்டால்.....
ஆதாம் ஏவாள்
ஆனந்தமாய் உலாவந்த
சுவனத்து சுகம்போல்
அமைதி பூங்காவாய்
அகிலமே மாறிவிடும்

-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புதிய பூமி"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?