Tuesday, May 5, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST
read more...