Monday, February 15, 2010

கவலை மறந்து சிரிங்க

படித்த பிறகு என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை, படிச்ச பிறகு கொஞசம் சத்தமாத்தான் சிரிங்களேன்...
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? 
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

 எதுக்காக இந்தியா பூராவும்போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
 தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

 
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகாகவிபாரதி மூணு பேருமே செம பிகர்!
 யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
 
 ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
 
பஸ் ரூட்ல பஸ் போகும்ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
 
 அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
 
பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
 

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
  
டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!
 ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா?
 
------ பில் கேட்ஸ் விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
  
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியேஎன்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பாஎனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!
 
கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்உங்க மொபைல்'வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டுஎன்றுதான் வரும்!! எப்பூடி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "கவலை மறந்து சிரிங்க"

SUFFIX said...

எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்...கலக்குங்க மன்சூர்!!

அப்துல்மாலிக் said...

அருமையான தொகு(சிரி)ப்பு தொடருங்க‌

Abu Khadijah said...

நன்றி சகோதரர்(சஃபி,அபுஅஃப்ஸர்).

அன்புத்தோழன் said...

Thanks, Felt like back to chennai....

இப்புடித்தான் மெசேஜு அனுப்ச்சு கொலையா கொண்டெடுப்பாய்ங்க....

Abu Khadijah said...

அன்புத்தோழா, உங்கள் முதல் வருகைக்கு நன்றி, மெசேஜ் அடிச்சு அடிச்சு கீயில் உள்ள எழுத்தே கானோமாமே, நானெல்லாம் இப்புடி அனுப்புனா ரவுண்டு கட்டி பின்னிபுடுவாய்ங்க. ஏதோ இங்க மெசேஜுக்கு காசுங்குரதாலே கம்முனுகீறோம்

Jaleela Kamal said...

ஹா ஹா சரியான காமடி நல்ல சிரிச்சாச்சு/

Abu Khadijah said...

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா, வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு நம்ம பெரியங்க சொல்லிக்கிறாங்க,

Abu Khadijah said...

thanks Jai for first visit and comment, keep visit always

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?