Friday, May 28, 2010

தன்னிலை சுகாதாரம்


தன்னிலை சுகாதாரம் [Personal Hygiene]...

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,

' உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]
அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.
இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை
,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.
காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'
பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் [ "பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்...[ உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு
போய்விடலாம் அல்லவா?
சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.
Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN


read more...

Tuesday, May 25, 2010

இதையும் தெரிஞ்சிக்குவோமே!

  என்ன அப்படி பார்க்கிறீங்க  படத்தை, உங்களுக்கு கணிக்க முடிகிறதா என்ன சொல்ல வரபோகிறேனென்று ,  எப்பொழுதெல்லாம் மக்காவுக்கு செல்வேனோ அப்பொழுதெல்லாம் இந்த சுவரசியமான விஷயத்தை பற்றி எழுதினால் என்ன? என தோன்றும் ஆனால் இந்த வாரம் தான்  அதற்கு சரியான நேரம் கிடைத்தது. 
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த படம் 18 ஆம் தேதி, ஏப்ரல் 2010 அன்று எடுக்க பட்டது, இந்த படத்தில் மக்கா மற்றும் அதனுடைய சுற்று வட்டாரத்தில் உயரமான கட்டடங்களை பார்க்கலாம், ஆனால் இவைகள் இன்னும் கட்டி முடிக்க படவில்லை, இதில் என்ன சுவரசியமான விஷயமென கேட்கிறீர்களா?, இந்த உயரமான ஹோட்டல்கள் கட்ட துவங்க முன் இங்கு ஒரு பெரிய மலை ஒன்றிருந்தது ஆனால் இப்பொழுது அதற்கான சுவடே தெரியவில்லை, எங்கு பார்த்தாலும்  கட்டடங்கள் அருமையான கட்டட கலையுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது, இவைகளை கட்டிமுடிக்க அவர்களால் எடுக்கப் பட்ட அவகாசம் தான் நீங்கள் மேலே பார்க்கும் எண்(266), இந்த எண் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும், இதைப் பற்றி விசாரித்த பொழுது எனக்கு சில தகவல் கிடைத்தது, இது பணியாளர்களை விரைவாக வேலை செய்ய சைக்காலிஜிக்கல் அப்ரோச்சாம்.(இப்படியும் வேலை வாங்கலாமா)

இதற்கு பக்கத்தில் ஒரு பெரிய மணிகூண்டு ஒன்றும் கட்டி கொண்டிருக்கிறர்கள், இது தான் உலகிலேயே பெரிய மணி கூண்டாம் , இதன் மொத்த உயரம் 380 அடியாம். இவைகளை பற்றி நான் சொல்லுவதை விட இங்கு சொடுக்கி பாருங்களேன்.   
 அடுத்து.... 
இறைவன் நாடினால் அடுத்த இடுக்கையிலிருந்து  என்னுடைய பழைய தொடரை (தெரிஞ்சிக்கலாம), ஆரம்பிக்கலாமென உள்ளேன், வேலையின் நிமித்தமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.
read more...

Monday, May 3, 2010

அதிரை உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க ஒலி வடிவில் ஒரு வேண்டுகோள்.

இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள்,  நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன்.
 

தொடர்புக்கு tjdn77@gmail.com

இதை எழுதி, ஒலியாக்கம் செய்து, நம்மை வெளியிட அனுமதியளித்த  என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.
read more...

Saturday, May 1, 2010

தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்


தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்....

இப்போது பள்ளிபடிப்பு முடிந்து என்னபடிக்கலாம் என பசங்க குழப்பத்திலும் / தெளிவிலும் இருக்கலாம். இதில் வீட்டில் பெரியவ்ர்களின் பங்கு மிக முக்கியம்.நான் "சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..இதிலெ இவன் படிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது" என அடம் பிடித்தால் ஒரு இலக்கு இல்லாத சந்ததியினரை உருவாக்குகிறீர்கள என சரித்திரம் / பூகோளம் எல்லாம் உங்களை வைய்யும்.

பசங்க இப்போது 'மார்க்கெட் நிலவரம்' தெரியாமல் 'பெருவாதிபேர்' படிக்கிறார்கள். [இராலில் மண்ணைக்கலந்து விற்க்கும் நம் ஊர் கடைத்தெருவுவுக்கும் நான் சொல்லும் மார்க்கெட்டுக்கும் சம்பந்தம் இல்லை] என் மச்சான் படிக்கிறான் / தெரு பையன் படிக்கிறான் என்று விலை போகாத படிப்புகள் / பட்டங்களில் நமது மாணவர்கள் ரொம்ப ஜல்லியடிக்கிறார்கள்.

"எஸ்கிமோட்டெ யான் தம்பி ஐஸ்கிரீம் விக்கனும்?"-
அனுபவமிக்க ஒரு பெரியவர்- முத்துப்பேட்டையை சார்ந்தவர்.

இப்படித்தான் ஒருவன் ஜவுளிகடை திறந்தால் இன்னொருவனும் அதையே திறப்பது, நகை கடை திறந்தாலும் பக்கத்திலேயே அதே மாதிரி திறந்து நாசமாக போவது என அதே தவறை திருப்பி திருப்பி செய்து கொண்டிருகிறோம்.

சரி உறுப்படியாக என்ன செய்யலாம்..இப்போது Educational Fair தமிழ்நாட்டிலும் வர ஆரம்பித்து விட்டது.இதற்க்கு முன்னோடியாக இருந்தது சிங்கப்பூர் / மலேசியா / யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகள். சமீபத்தில் திருச்சி / சென்னையில் நடந்தது என நினைக்கிறேன். இதுபோன்ற இடங்களுக்கு உங்களக்கு தெரிந்த / தெரியாத யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். வருங்காலத்தில் அந்த பையன் 'கல்வி கண் திறந்த மாமனிதர்' பட்டம் உங்களுக்கும் தரலாம்.

பசங்களிடம் " அந்த காலத்து SSLC இந்த காலத்து M.A & M.Sc க்கு சமம் தெரியுமா?' என்று பன்ச் டயலாக் எல்லாம் பேச வேண்டாம். நீங்கள் அப்போது படித்த செலபஸ் இப்போது உள்ள பல்கலைகழகங்களின் காம்பவுன்டை தாண்ட கூட பத்தாது.

ஏவியேஷன் இன்டஸ்ட்ரி இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. Aircraft Engineerss & Aeronatical Engineers / தேவைகள் அதிகம். பெட்ரோலியம் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி Petrolium Exploration Engineer தேவையை அதிகப்படுத்தி இருக்கிறது. மருத்துவம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் & Stem Cell Reserach நிறைய நல்ல எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. Air Force Cadet Engineer சேர்ந்த்தால் அப்பாயின்ட்மென்ட் வரை Air Force செலவு செய்கிறது.
வளர்ந்து வரும் Financial Sector இப்போது உலகளாவிய ரீதியில் Financial analyst & Actuary க்கு பணம் அள்ளித்தருகிறது.

நன்றாக சம்பாதித்து வெளிநாட்டு சென்ட் எல்லாம் பர்மா பஜாரில் வாங்கிக்கலாம்.

இதற்கெல்லாம் நிறைய வெப் லின்க் இருக்கிறது. கொஞ்சம் நேரம் செலவு செய்து ரிசேர்ச் செய்ய வேண்டும்.

உயர்கல்வி தொடர நினைக்கும் மாணவர்கள் தயவு செய்து மண்ணடி தான்டாத காக்கா , புளிய மரத்தில், ரயிலடியில் உட்கார்ந்து சவடால் விடும் ஆட்களிடம் ஐடியா கேட்க வேண்டாம்.

19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை மொத்தமாக ஓய்த்துவிடும் டெக்னிக் இதுவரை எனக்கு புரியாத புதிர்.

உயர்கல்வி ஒன்றே சமுதாய உயர்வுக்கு முக்கியம்.

விடுங்க........ அவய்ங்க படிக்கட்டும்

ZAKIR HUSSAIN
read more...