Saturday, January 30, 2010

சுவாரசியமான பயணம்

அன்றொரு வியாழன் மதியம்,மக்காவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி ,என் மாமாவோடு பஸ் ஸ்டாப் சென்றடைந்தேன், போனவுடன் அங்கே ஒரே மரியாதை, (மக்கா, மக்கா,மக்கா என்று கூறி பிறகு என்னை ராஜ மரியாதையுடன் அழைத்து அவனுடைய காருக்கு சென்றதை நினைத்தால், இன்றும் புல்லரிக்குது).

பிறகு மக்காவிற்கு சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் , இது வரை காணாத காட்சிகளை என்னால் பார்க்க முடிந்தது, என்னங்க ஓவரா பில்டப் போடாமே விசயத்துக்கு வாங்கன்னு சொல்றிங்களா,

* முன்பெல்லாம் ஜித்தாவிலிருந்து சில மைலுக்கு அப்பால் நிறைய காய்ந்து போன மலைகளும் பாறைகளும் , யாருமில்ல சிறு பாலைவனமுமாக காட்சியளித்த எனக்கு, தற்பொழுது அங்கெல்லாம் மக்கள் கூட்டத்தையும் அந்த பச்சையான புள் முளைத்த பாறையை பார்க்கும்போது அளவில்லா மகிழ்ச்சியும், இவையெல்லாம் படைத்த இறைவனின் வல்லமையையும்தான் பறைசாற்றியது.

* அப்படியே போகும்போது அங்கேயும் மக்கள் கூட்டம், ஆனால் மலையுமில்லை மகிழ்ச்சியுமில்லை, ஒரு அதிர்ச்சி , அது என்னவெனில் ஒரு அழகான கார் கசக்கி போட்ட காகிதம்போல் இருந்ததை பார்த்ததும் , அவர்கள் மேல் பரிதாபமாகத்தான் இருந்தது, உலகிலேயே அதிகமாக வாகன விபத்து ஏற்படுவது சவுதியில் தானாம், அதிவேகம் ஆபத்தை தரும் எனபது அவர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது.

* என்னடா இது , மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், இவர்களுக்கு பொருமை யே இல்லையா என்று நினைத்து கொண்டிருக்கும்போது, ஒரு வழியாக மக்காவை சென்றடைந்தேன். மாஷா அல்லாஹ்! பாங்குடைய சத்தத்தை கேட்டவுடன் ,மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த அந்த கண்கொள்ளாத காட்சியை, வெறுமனே எழுத்தில் எனக்கு வருணிக்க தெரியவில்லை, நானும் என் நண்பனும் இஷா தொழுது விட்டு அந்த பிரமாண்டமான பள்ளியில் காபாவை நோக்கியவனாக அதனுடைய சரித்திரதைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் என் நண்பன் துவாவுடைய (இறைவனிடம் உங்களுடைய தேவையை எப்படி கேட்பது போன்ற) விஷயத்தை பற்றி மிக அழகாக சொன்னான், பிறகென்ன நாங்கள் இருவரும் எங்களுக்குத் தேவையானவற்றை கேட்டவுடன், எங்களின் உள்ளத்தில் கிடைத்த அமைதி யாருக்குதான் அப்பொழுது கிடைத்திருக்க முடியும்?, ஆகவே சகோதர, சகோதரிகளே, மனிதனின் சஞ்சலங்களை மனிதனிடம் சொல்லி அழுவதைவிட, நம்மை படைத்த அந்த இறைவனிடம் அழுது கேட்கும் போதுதான் உங்களின் உள்ளம் இன்னும் அமைதி பெறுகிறது.

குறிப்பு: இதுதான் எனது முதல் கட்டுரை, ஆகையால் ஏதேனும் பிழையோ , வேறேதும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கிழ் காணும் மின்னஞ்சலுக்கு (mansooramk @gmail .com )அனுப்பவும், அல்லது நன்றாக இருந்தால் இங்கயே பின்னுட்டம் மிடவும்.
read more...

Tuesday, January 12, 2010

interview With Body Language

Having a slick resume and all the right answers to tricky interview questions won’t get you a answer if your body language gives an entirely different message.
  • Tone of voice and body language accounts for 65 percent of what’s communicated. Words account for 35 percent of the message that’s communicated.

  • Body language can give away a lot of our feelings, regardless of whether we keep our mouths shut or not, and without an awareness of our actions, nervousness, dishonesty, boredom and other negative attributes can become dead give always.

  • Before taking a seat, be mindful of what you’ll be staring at. If you have a choice, avoid staring at a bright window. If you don’t apparently have a choice, don’t be afraid to ask. Ensure that you have room to move and reposition yourself if you become stiff or restless.

  • To begin with, you need to set yourself up in a confident and comfortable position to help avoid negative body language habits. Make sure you are comfortable seated in an upright position ensuring that no particular part of your body is under strain (e.g. your neck). Keep your hands rested in your lap, your head raised, showing an expression of interest and relax your shoulders, without slumping into the seat.

Although we’ll cover specific body language signs later, here are the obvious ones to watch out for.

  • Fidgeting shows boredom and restlessness

  • Crossing arms indicates an unwillingness to listen

  • Tapping your foot, is distracting and a sure sigh of boredom

  • Doodling on paper shows you’re not paying attention

  • Touching your face or playing with your hair can be a sigh that you’re hiding something

  • Looking away or hesitating before or while speaking indicates that you’re unsure of what you’re saying

  • A fixed, unfocused stare shows your attention is elsewhere

Voice

A good CV and all the right answers to the toughest interview to the toughest question won’t land you the job if your voice gives off an entirely different impression. It is important to project yourself confidently in a clear, controlled and steady voice can be easily understood.

Take some time to practice, even staging a mock interview with a friend or colleague helps. Try to be aware of the following:

  • Speak clearly in a controlled range of tones, avoid a monotone

  • Always pause before speaking, this avoids instinctively reacting and saying the wrong things

  • Speak slightly slower than normal, don’t over do it though

  • Vary your tone and dynamics, but try not to speak too loudly or too softly

  • Don’t mumble or gabble on excitedly

  • Keep your hands away from your mouth as you speak

  • Watch your pitch (high-pitched voices are tough on the ears) and avoid a ‘sing-song’ tone

  • Let your voice show your enthusiasm and keenness

Body Signals

Whether we intend it or not, our body language gives off very subtle sign which are subconsciously interpreted by the other party. We likewise read the same into other people’s behavior. Imaging conducting an interview with someone behind a two-way mirror, we wouldn’t have the benefit of responding their facial expressions and would feel quite unnerved by the experience. Every little frown or smile gives us the caution or confidence to make our next statement and it is a sublime skill, which every human being has developed since childhood. Some people are more receptive to body language than other, but as a candidate striving to make a good impression, it is important to be aware at all times of the body language that may Guide to body language

Positive

  • Responsive / eager: Leaning forward, open arms, nodding

  • Listening: Head tilted, constant eye contact, nodding and verbal acknowledgement

  • Attentive: Smiling

Negative

  • Bored: Slumped posture, foot tapping, doodling

  • Rejection: Arms folded, head down, subconscious frowning

  • Aggression: Leaning to far forward, finger pointing, grinding teeth

  • Lying: Touching face, hands over mouth, eyes averted, shifting uncomfortably in your seat, glancing

And finally…

Seven signals for a successful interview

  1. A smile is the most positive signal you can give, it re-affirms your enthusiasm and good nature, but be careful of over-grinning stupidly.

  2. Maintain regular, attentive eye contact, but remember to avert your gaze from time to time to avoid staring.

  3. Relax! Give off calm signals and don’t rush through the interview, be mindful of time, but let the interviewer dictate the pace of the interview.

  4. Mirror the interviewer’s techniques. If they laugh, laugh with them, if they lean forward to impress a point, respond by leaning forward to show your attention.

  5. Do not hurry any movement, if you’re challenged with a difficult question, remind yourself about negative body language habits before answering the question.

  6. Try to maintain an alert position, sit up straight, don’t slump, and adjust your position slightly if you get uncomfortable but don’t fidget.

  7. Always try to adopt an open, honest and confident attitude: this is the starting point of managing subconscious body language.

    thanks geewala.com

read more...

Monday, January 11, 2010

ஒருவனுக்கு ஒருத்தி.

As Received from TAFAREG-Jeddah

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً 32

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. 17:32


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இந்தியாவிலும், இந்தியாவிலிருந்து வெளியில் வாழும் ஒட்டு மொத்த இந்தியரையும், தலைகுணியச் செய்த சம்பவம் சமீபத்திய முறையற்றப் பாலியல் விவகாரத்தில் என்.டி.திவாரி மாட்டிக் கொண்ட சம்பவமாகும்.

மத்திய அமைச்சராகவும், மூன்று தடவை முதலமைச்சராகவும், இன்னும் பல முக்கிய அரசு கேந்திரப் பொறுப்புகளையும் வகித்து இறுதியாக ஆளுநராக பதவி உயர்வு பெற்று 87 வயது நிரம்பப்பெற்ற முதியவர் விபச்சாரப் பெண்களுடன் மரியாதைக்குரிய ஆளுநர் மாளிகையில் உல்லாசமாக இருந்து மாட்டிக்கொண்டு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைகுணிவை ஏற்படுத்தி விட்டார்.

செய்தி அறிந்து கொதிப்படைந்த பெண்கள் அமைப்பினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இறுதியாக அவரது வீட்டையும் முற்றுகையிட்டு கேட் கதவுகளின் மீதேறி நாகூசும் வார்த்தைகளைக் கூறி கோஷமிட்டு தனது எதிர்ப்பை பதிந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரப் பெண்கள் எழுப்பிய நாகூசும் கோஷங்களை நேரில் கேட்ட அவரது குடும்பத்தினர் வெட்கி தலைகுணிந்தனர் எத்தனைக் கோடிகளை அவர்களுக்காக இவர் குவித்துக் கொடுத்திருந்தாலும் இதன் மூலம் அவர்கள் அடைந்த அவமானம் அதற்கு நிகராகாது.

இதை விடவும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து உயர்ந்த பதவிகளை அளித்த காங்கிரஸ் தலைமை, மற்றும் அதன் உறுப்பினர்கள் எத்தனை வேதனைப் பட்டிருப்பார்கள்.

இதை செவியுற்ற திருமனம் ஆகாத ராகுல் காந்தி இவரை எத்தனை அசிங்கமாக கருதி இருப்பார்.

காடு வா !! வா !! என்றழைக்கும் பதிமூன்றுக் குறைய நூரு வயதைத் தொட்ட திவாரி அவர்களுக்கு இளம் பெண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம் ??

இதுப் போன்ற பெரிய இடத்து ( பெரியவாள்கள் செய்யும் ) சில்மிஷன்கள் ஒண்றிரண்டு மட்டுமே அவ்வப்பொழுது வெளிச்சத்திற்கு வருகின்றன ஏராளமானவைகள் கும்மிருட்டுக்குள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடுகின்றன பெரியவாள்கள் சமாச்சாரம் நமக்கு எதுக்கு என்று விட்டு விடுகின்றனர்.

Ø மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்;று ஆண்களைக் கூறுவதுண்டு.

Ø கூந்தல் நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை என்றுப் பெண்களைக் கூறுவதில்லை.

காரணம் பெண்கள் தாய்மை அடையும் ஒவ்வொரு முறையும் அவர்களது அழகும், உடல் வனப்பும் குறைவதுடன் சேர்ந்தே செக்ஸின் மீதான ஆர்வமும் குறைந்து கொண்டு வரும் முதுமையை நெருங்குவதற்கு முன்பே பெரும்பாலனவர்கள் செக்ஸ் உறவை வெறுத்து விடுவார்கள் அதனால் ஆசைக் குறையாத ஆண்களுக்கு அவர்களால் முதுமையில் ஈடுகொடுக்க முடிவதில்லை இதனால் வெறுப்படைந்த ஆண்கள் தள்ளாடும் வயதிலும் வேலி தாண்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

( பொருளாதாரத்தில் குறைவானவர்கள் தங்களுடைய பார்வையை தாழ்த்திக் கொண்டு அதே மனைவியுடன் திருபதி அடைந்து கொண்டு கண்ணியத்தைப் பேணிக் கொள்வார்கள். பைசாப் பார்ட்டிகள் பார்வையை இளசுகளின் மீதுப் பாய விட்டு மாட்டிக் கொள்வார்கள் )

நடுத்தர வயதை உடையவர்கள்.

இன்னும் நடுத்தர வயதை உடையவர்களில் பைசாப் பார்ட்டிகளாக இருப்பவர்கள் இளம் மனைவி ஒன்றுப் போதாமல் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை அடைய ஆசைப்பட்டு விபச்சாரப் பெண்களை அல்லது நெருக்கடியில் இருக்கும் சில குடும்பப் பெண்களை வளைக்க முயலுகின்றனர்.

துணைப் பாத்திரங்களில் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் தோன்றும் நடிகைகள் கூட திடீரென கார், பங்களாவிற்கு மாறி விடுவதற்;கு இவர்களைப் போன்ற பலப் பெண்ணாசைக் கொண்ட பணக்காரர்கள் ஒருக் காரணமாகின்றனர்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவமேக் காரணம்.

Ø அழகும் வனப்பும் வாய்ந்த எண்ணிலடங்கா ஏழைப்பெண்கள் வரதட்சனைக் கொடுமையால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

Ø கணவன் மார்களை விபத்துகளில், அல்லது இயற்கை மரணத்தில் இழந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் அல்லது தனித்து தவிக்கும் ஏராளமான விதவைகள் மறுவாழ்வு கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றனர்,

Ø திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேற்றுமை காரணத்தால் விவாகரத்துப் பெற்று மறுவாழ்வு கிடைக்காமல் ஏராளமானப் பெண்கன் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க இளைஞர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை ஒருத்தி மட்டும் தான் என்பதால் அந்த ஒருத்தி புதியவாளாக இருக்க வேண்டும் என்றேப் பெரும்பாலும் விரும்புகின்றனர்.

இனி நமக்கு வாழ்வு கிடைக்கப் போவதில்லை என்று விரக்தி அடைந்த அபலைப் பெண்களில் பலர் ஒருத்தியை மனந்து கொண்டவனுக்கு அந்தப் புறத்தில் ஆசை நாயகியாகி விடுகின்றனர். பலப் பெண்கள் விபச்சார புரோக்கர்களால் விபச்சார சந்தைகளுக்கு எற்றுமதி செய்யப்படுகின்றனர் இவ்வாறு வழி தவறும் அபலைகள் ஏராளம் !! ஏராளம் !!

பலப் பெண்ணாசைக் கொண்டவர்கள் மேற்காணும் திக்கற்ற அபலைப் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து முறையாக திருமனம் செய்து கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் அப்பெண்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்படுவர், குவிந்து கிடக்கும் அவர்களது செல்வங்களுக்கு அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை வாரிசாக்கலாம் !! இதுப் போன்று செய்து கொள்ள ஒருவர் முன் வந்தால் அவரை அல்லாஹ் இன்னும் மிகப் பெரிய செல்வந்தராக்கி விடுவான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 24:32

மிகப்பெரும் செல்வந்தரும், அரசின் கேபினட் அதிகாரியுமாகிய என்.டி.திவாரி அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெண் குலத்தை அழிவில் ஆழ்த்தும் கோட்பாட்டை உடைத்தெறிந்து மேற்காணும் அபலைப் பெண்களில் ஒருப் பெண்ணை முறையாக திருமனம் செய்துகொண்டு தனது ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் ?

Ø அவர்களது அந்தரங்க உறவை எவரும் ரகசியமாகப் படமெடுத்து தொலைகாட்சியில் ஒலிபரப்பி நாரடித்திருக்க முடியாது,

Ø பலதார மணம் புரிந்து விட்டார் என்றுக் கூறி அதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வீட்டை முற்றுகை இட்டு கேட்டைத் தாண்டிக் குதித்து நாகூசும் கோஷங்களை எழுப்பி இருக்க முடியாது.

Ø மறுமனம் முடித்ததைக் காரணம் காட்டி அவருடையப் பதவியைத் தலைமைப் பறித்திருக்காது,

இத்தனைப் பெரிய அவமானத்தை ஈட்டித் தந்தது பழமைவாத ஒருவனுக்கு ஒருத்தி என்றக் கொள்கையே !

ஆண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் அவர்களுக்கு பலதார மணத்தை அனுமதித்தான்.

பெண்களின் உடல் உறுப்புகளின் செயல் திறன்கள் இவ்வாறுத் தான் இருக்கும் என்பதை அறிந்த இறைவன் கணவன் இறந்தால், அல்லது இழந்தால் மட்டுமே மறுமணத்தை அனுமதித்தான்.

முஸ்லீம்களே !!

ஒரு சில முஸ்லீம் செல்வந்தர்களும் கூட இதுப் போன்ற ஈனச் செயலில் ஈடுப்படுவதாக செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம் அவ்வாறு நடப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்

ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட (நான்கிற்குள்) திருமனம் செய்து கொள்வதற்கு இறைவனாhல் சலுகை வழங்கப்பட்டப் பின்னரும் சமுதாயத்திற்கு வெட்கப்பட்டு ஒன்றை மட்டும் மனைவியாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களை ஆசை நாயகிகளாக்கினால் அவர்கள் மீது இறைவனின் கோபம் ஏற்படும், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் இதைச் செய்தால் அவர்கள் மீது இன்னும் இறைவன் அதிகமாக இறைவனின் கோபம் ஏற்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

கீழ்கானும் மூவரையும் அல்லாஹ் மறுமையில் மன்னிக்க மாட்டான், கொடிய வேதனையை கொடுப்பான். விபச்சாரம் செய்யும் வயோதிகர்,( கிழவர் ) பொய்யுரைக்கும் அரசன், பெருமையடிக்கும் ஏழை என்று அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : முஸ்லிம் , நஸயீ

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



read more...

Friday, January 8, 2010

திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா?

As received

இஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா?ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி

'திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது

திருமண ஒப்பந்தம்

  • தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது
  • அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள். எனவேதான் அல்லாஹ் கணவனுக்கு அவனுடைய மனைவியை ஆடையாக வர்ணிக்கிறான்
  • பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!
  • திருமணம் செய்துக்கொள்ளாமல் அல்லது மறுமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும். எதிர்காலத்தில் வரவிருக்கும் அவலநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.
  • ஒரு மனிதனுக்கு பிள்ளைச் செல்வம் கொடுப்பது அல்லாஹ்வின் அருளாகும் இந்த கிடைத்தற்கரிய அருள் மட்டும் மனைவியின் மூலமாக கிடைக்கிறது இதை நலுவ விடலாமா?
  • கணவன் தன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவைக்கூட அல்லாஹ் கூலியாக கருதி அதை நிரப்பமாக வழங்குவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் எனவே உங்கள் கூலியை நீங்கள் அறிந்தே இழக்கலாமா?
தரம்கெட்ட மேலை நாட்டு கலாச்சாரம்

மேலை நாடுகளில் நீங்கள் காணலாம் இளமைப் பருவத்தில் திருமணமாகாத நிலையில் உறவு கொண்டு வாழ்ந்து வருவார்கள்

  • அவர்களுக்கு கணவன், மனைவி, சகோதர, சகோதரிகள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் யாருக்கு பிறந்த அண்ணன், தம்பி, பிள்ளை என்றே கணிக்க முடியாது!
  • காலையில் ஒருவன் மாலையில் ஒருத்தி என்ற கேவளலமான வாழ்க்கையில் அற்ப சுகம் காண்பார்கள் வயோதிக பருவத்தில் தற்கொலை செய்துக்கொள்வார்கள்!
  • குழந்தை பிறந்தாலும் தந்தை யார் என்று தெரியாத அவல நிலைக்கு பிள்ளைகள் தள்ளப்படுவார்கள்
  • முதுமை அடைந்து விட்டால் அநாதை ஆசிரமங்களுக்கும் ஏன் பிச்சை எடுக்கும் அளவுக்கும் தள்ளப்படுகிறார்கள்
  • வருடத்தில் ஒருநாள் தாய், தந்தையர் தினம் கடைபிடித்து அன்று மட்டும் யாருக்கோ பிறந்த பிள்ளையாக இருக்கும் அவர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும் அவலநிலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
  • வயோதிகப் பருவத்தில் விம்மி விம்மி அழுவார்கள் பதில் கூற ஆள் இருக்காது மரணித்தாலும் எடுப்பதற்கு நாதியிருக்காது
  • உடன் பிறந்தவர்கள் என்ற இரத்த பந்தமே பெரும்பாலும் இருக்காது.
  • ஆடம்பரமாக, மல்டி மில்லியனராக வாழந்துவருவார் ஆனால் வயோதிக பருவத்தில் கவனிக்க சொந்த வாரிசு இருக்காது! கஷ்டப்பட்டு சேமித்த சொத்துக்கள் பயணற்று சென்றுவிடும்.
திருமணம் வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்ள தடை

இன்றைக்கு நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் மாற்றுமதத் துறவிகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் துறவிகளாக வாழந்து வருவார்கள் ஆனால் அவர்களால் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே பெண் துறவிகளை நியமித்து அவர்களுடன் தவறான உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் என்ன விளங்குகிறது அவர்களின் மதம் போதிக்கும் துறவரம் தவறானது மேலும் அவர்களின் கொள்கையும் தவறானது என்பதுதானே!

'அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)

உங்கள் மன அமைதிக்காகவே திருமணம்

ஒரு ஆணோ பெண்ணோ திருமணமாகாத நிலையிலோ அல்லது திருமணமாகியும் திருமண ஒப்பந்த முறிவு ஏற்பட்ட நிலையிலோ மன நிம்மதியுடன் வாழ முடியுமா? திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா? இந்த அத்தாட்சியை நாம் இழக்கலாமா?

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30:21)


அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்'. (அல்குர்ஆன் 13:38)

அநாதைகளுக்கும் திருமணம் முடித்துவைக்க வேண்டும்

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4-6)

அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும்!

'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

கணவனை இழந்த அல்லது தலாக் பெற்ற பெண்கள் இத்தா முடிந்த நிலையில் மறுமணம் செய்துக்கொள்ள விரும்பினால் அவர்களை தடுக்கக்கூடாது!

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்)

மனைவியர் உங்களுக்கு ஆடை

நீங்கள் அணியும் ஆடை உயர்தரமானதாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், கண்ணியமுள்ளதாக இருக்க வேண்டும் உடலை மறைப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆடையில் ஒரு பொத்தான் விழுந்துவிட்டாலும் உடனே அதை தைத்து நல்ல முறையில் அணிந்துக்கொள்வீர்கள் ஆனால் மனைவி உங்களுக்கு ஆடையாக இருக்கும் பட்சத்தில் அவளை மட்டும் கவனிக்கத் தவறுவது ஏன்?

'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை'. (அல்குர்ஆன் 2:187.)

'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன'. (அல்குர்ஆன் 2:228)

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

மனைவி குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருக்க வேண்டும்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், 'திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!" என்று கேட்டார்கள். நான், 'ஆம்" என்று கூறினேன். 'கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், '(கன்னிப் பெண்ணை) அல்ல் கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)" என்று கூறினேன். 'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள். (புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4052)

திருமணம் உள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கேடயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

திருமணத்தால் வறுமை அகலும்.

'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

அல்ஹம்துலில்லாஹ்
மேற்கண்ட பதிலில் தவறு கண்டால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளலாம்! (இன்ஷா அல்லாஹ்

read more...

Thursday, January 7, 2010

ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.


ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.
சமீபத்தில் ஒரு சகோதரியின் வெப்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறைபற்றி கொஞசம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்க்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்...விலாவாரி "கிட்னி வறுவல்' சார்ந்தது.]
இதற்க்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லாஇருந்துச்சி:" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத்தெரியவில்லை. எனக்கு உள்ளுர பயம் தான்.நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!'என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினென் இப்படி:

இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம்
உள்ளவர்கள்] ' ஹிந்து வாக இருந்தால்
"சங்கு" நிச்சயம். முஸ்லீமாக
இருந்தால் 'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம்.

ஆனால் என் ந்ண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த இ-மெயில்
இப்படி இருந்தது;

ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?

ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டஙளின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . மூளை fry , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் beef கொத்து, மட்டன் கொத்து, chicken கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தறுவான்.)ஆட்டுக்கால் பாயா, ஈரல் fry, இப்டி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ஙக(கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்ற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா.) .
'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம் பயம் காட்றியப்பா.

சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' இறைச்சிதாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.
எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr.Bala Subramaniam.Cardiologist osler diagnostic centre;Chennai]
" பொதுவா மட்டன் சாப்பிடலாம்'
சாப்பிடும்ம்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.

" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?'

'ஆர்கன்...கிட்னி/ஈரல்....

"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?'

'உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'
இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது
பொதுவாக சுவர்ரொட்டி , ஈரல் இவைகளுக்கு என்ன வித மான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும்
முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
..மற்றும் அன்றைக்கு [Physiology ]"உடல் உறுப்புகள்&பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் முடியாது
.எனக்கு தெரிந்து ஆட்டுமூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்...கொலஸ்ட்ராலை த்விர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும்.பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க
3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ]சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம்.
"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேணெ எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்க
வேண்டிவரும்.கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.
உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு ' நீங்களே சாப்பிட்டுறுங்க..நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு..அதை சாப்பிடுகிறேன்' என்று சொல்கிறார்களா..உங்கள் கல்யாணப்பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி /திரு நிறைச்செல்வி என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி ' என்று திருத்தி வாசிக்கவும்.

ZAKIR HUSSAIN
read more...

Saturday, January 2, 2010

கல்லூரி நினைவுகள் - I

ஒரு தடவை நானும் என் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம்(அரட்டை) என்னுடைய நண்பர்களில் ஒருவனை மட்டும் பார்த்து அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்துக்கொண்டிருந்தார்கள், அவனுடைய ஒரு நல்ல குணத்தை நான் இங்கு சொல்லியாக வேண்டும்,(நண்பர்களில்) யார் அவனை கிண்டல் செய்தாலும், அடுத்த வினாடியே அனைத்தையும் மறந்து விட்டு, கூலாக என்ன மச்சான், இன்னிக்கி எங்கையாவது வெளியே போலாமா என்று சொன்ன உடனே அனைவரும் வெக்கிப்போய் தலை குனிந்து விடுவார்கள். அனைவரும் போனப்பிறகு அவன் என்னிடம் அன்று நடந்த நிகழ்வையும் அவன் மனம் பட்ட கஷ்டத்தையும் சொல்லி காண்பிக்கும் பொழுது , கிண்டல் செய்தவர்கள் மீது ஆத்திரம் மேலோங்கி இவர்களெல்லாம் உண்மையான நண்பர்கள் தான என்ற எண்ணம் வரும், ஏனெனில் ஒரு உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டுமெனில் "அவனைப்பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்" அவனுடைய கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து கொள்ள வேண்டும், அனைத்தையும் விட அவர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்ப்போல் பேச வேண்டும்.

இந்த பதிவை படிக்கும் என் நண்பர்களுக்கு நான் யாரைப்பற்றி எழுதி இருக்கிறேனென்று புரியும்.

:- இச்சிறியோனின் எழுத்தில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும்
read more...