Sunday, September 12, 2010

SELAMAT HARI RAYA

SELAMAT HARI RAYA

"உபயம்" TO: இந்த ஆர்டிக்கில் எழுத தூண்டுதலாக இருந்த சகோதரர்கள் அபு இப்ராஹிம் , தாஜுதின், சாகுல் , யாசிர், உன்னைபோல் ஒருவன், கிரவுன்.

மலேசியாவில் பெருநாள்.... அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நாம் செய்யாத சில நல்ல விசயங்களை இந்த மலாய்க்காரர்கள் செய்கிறார்கள். அதாவது பெருநாள் தொழுகை தொழுதவுடன் வீட்டுக்கு வந்து தாய் தகப்பனிடம் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சலாம் கொடுத்து பிறகு "மன்னிப்பு" கேட்பது. சமயத்தில் நான் நினைப்பது உண்டு .. இந்த மாதிரி நம் ஊரிலும் இருந்தால் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைகள் ஓய்ந்து இருக்குமே. .. அந்த நாள் எப்போது தான் வருமோ..


[ கடப்பாசி , வட்டிலப்பம் பற்றி ஒன்னும் சொல்லலியே எனும் நண்பர்கள் கொஞ்சம் அவதானிக்க!]

சிலரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லாத பட்சத்தில் மையவாடிக்கு போய் அவர்களுக்காக யாசின் ஓதுவது [ சின்ன பிள்ளைகள்கூட ] அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு வருவார்கள். " நல்ல நாளும் பெரியா நாளும் யான் வாப்பா மைத்தாங்கரைக்கு போரா " என்று எந்த பெரியவர்களும் ” ப்ரேக்” போடுவதில்லை. ஏதோ நாம் மட்டும் "சாகாவரம்' வாங்கி வந்த மாதிரி.

அடுத்த மிகப்பெரிய விசயம் “BALIK KAMPUNG’ [ கிராமம் திரும்புதல்]


மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூர் எனபது அனைவருக்கும் தெறிந்ததே, ஆனால் இங்கு இருப்பவர்களின் பூர்வீகம் மற்ற ஊர்களாக [கிராமம்] ஆக இருக்கும். நோன்பு ஆரம்பத்திலேயெ இந்த பஸ், ரயில் டிக்கட் எல்லாம் விற்று முடிந்துவிடும். அதையும் தாண்டி பெருநாளைக்கு முதல் நாள் [ அல்லது 2 நாளைக்கு முன் ] எக்ஸ்பிரஸ் ஹைவே, நேசனல் ஹைவே எல்லாம் பிதுங்கும். ஒரு முரை இந்த டிராபிக்கில் மாட்டி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வர 4 மணி நேரம் பிடிக்கும் ஹைவேயில் 10 மணி நேரம ஆகி நத்தையை விட கேவலமாக நகர்ந்து , இடையில் உள்ள ஹைவே டாய்லெட் எல்லாம் உள்ளே புக முடியாத அளவு மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிந்ததால் அந்த இடத்திலேயெ முடிவெடுத்தேன்

• இந்த மாதிரி பெருநாள் காலங்களில் அவுட் ஸ்டேசன் தவிர்ப்பது.

• ஆட்டொமேடிக் கியர் கண்டுபிடித்து இவ்வலவு நாள் ஆகியும் 'எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும் என்ற மங்கம்மா / மங்காத்தா சபதத்தை கைவிடுவது.

மலேசியாவின் ஹைவெ ஒரு வித்யாசமானது. மலேசியாவின் தென்கோடி சிங்கபூரிலிருந்து வட எல்லை தாய்லாந்து வரை [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] ஏறக்குறைய 1100 கிலோ மீட்டரையும் ட்ராபிக் லைட் இல்லாமல் கடக்கலாம், அவ்வளவு நீட்டமான, நீட்டான ஹைவே. இப்போது இந்தியாவில் நிறைய ஹைவே ப்ராஜக்ட் இவர்கள் தான் செய்கிறார்கள்.


'பெருநாள் அன்று பெருநாள் தொழுகை இங்கு உள்ள டெலிவிசனில் நேரடி ஒளிபரப்பு உண்டு. தமிழ் புத்தாண்டுக்கு தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசும் / உளரும் நடிகைகளை வைத்து பேட்டி எடுக்கும் கொடுமை மாதிரி எதுவும் இவர்கள் செய்வதில்லை.

இங்கு உள்ள TV3 இஸ்லாத்தின் வளர்ச்சியையும் சரித்திரங்களையும் JEJAK RASUL என்ற நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 20 எபிஸோட் வரை எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறது. [ மலாய் மொழியில்] ஒரு எபிஸோட் = 30 நாட்கள், ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு லொகேசன்.. இதுவரை இவர்கள் கவர் பண்ணாத நாடே இல்லை எனலாம். இந்த வருடம் இவர்கள் கவர் செய்த இடங்களில் 30 நோன்பும் கொரியாவிலும் , ஜப்பானிலும் எந்த அளவு இஸ்லாம் வளர்த்து இருக்கிறது என்றால்... வார்த்தைகளுக்கு கட்டுப்படாத அந்த மக்கள் ... ஈமானின் பலத்தை இவர்களிடமிருந்து நாம் கற்ருக்கொள்ள நிரைய இருக்கிறது.

பிள்ளைகளுக்கு பெருநாள் காசு கொடுப்பதைகூட கலைநயத்துடன் ஒரு அழகிய என்வெலெப்பில் வைத்து செய்வார்கள். அதன் பெயர் "அங்பாவ்' இந்த சிஸ்டம் சீனர்களிடம் “சுட்டது’.


மற்றபடி பெருநாள் சாப்பாடு [ இப்பதான் நம்ம சப்ஜெக்ட்டுக்கு இந்த ஆளு வர்ராய்ன்யா என்பது காதில் விழுகிறது ]

நாம் எல்லாம் தென் இந்திய முஸ்லிம்களாக இருப்பதால் நம் அதிராம்பட்டினத்து 'தொலி, [ எந்த "லி"] வட்டிலப்பம் [ஹைபர்டென்சனின் 'சத்ரு'] கடப்பாசி, இடியப்பம் , எறச்சானம் என்று வயிறு 'காந்தும்" மெனுக்கள் அதிகமாகும். அடுத்த நாளின் "மொளவுதண்ணி' , ரசத்தின் ருசியில் மீண்ட சொர்க்கம் தெரியும்.

சாப்பாடு விசயங்களை ஒரு தனி ஆர்டிக்கில் ஆக எழுதலாம்.

இப்போது புதிய சமுதாயங்களின் காலமாக இருப்பதால் ரெடிமேட்சட்டையின் அளவு ஸ்டிக்கர் கிழிக்காமலும், டிஸ்ப்லேயில் மடித்துவைத்தமாதிரியெ அயன் பண்ணாது கித்தா[ரப்பர்] செருப்பும், பாம்பு மார்க்] சென்ட் போட்டு நமக்கெல்லாம் பெருநாள் காசு தந்து வளர்த்த அந்த வலுவான அப்பாக்கள் இப்போது இல்லை. [ இவர்களை பற்றி ஒரு ஆர்டிக்கில் முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். Infact that was my fisrt article in internet , அதிரை நிருபர் அனுமதித்தால் மறுபடியும் வெளியிடலாம், நான் அனுப்பி தருகிறேன்]

மலேசியாவில் கலர்புள்ளான விசயங்கள் கொட்டிகிடக்கிறது.

இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள். ஒவ்வொறு வார இறுதியிலும் பெருநாளைக்குறிய விருந்து இருக்கும்.

--ZAKIR HUSSAIN
read more...

Monday, September 6, 2010

மனசு மயங்கும்.....

மனசு மயங்கும்.....

தொடர்ந்து துரத்தும் வேலைகள், தினம் தினம் வெறுப்பேத்தும் ட்ராபிக் ஜாம். கஸ்டமரின் மெடிக்கல்ரிப்போர்ட், கார் ஓட்டிக்கொன்டிருக்கும்போதே அலைபேசியில் பாடம் நடத்த சொல்லும் ஜுனியர்கள், மொட்டை வெயிலில் பார்கிங் தேடும் கொடுமை, மாதக்கடைசிக்கு அடிமையாகிப்போன நடுத்தரவாழ்க்கை இதை எல்லாம் மூட்டை கட்டிவைக்க சொன்னது அந்த காலைச்சாரளில் கூவிய அந்தமுகம் தெரியாத குயில்... காலை நேரத்தில் சலவைக்கு போட்ட மாதிரி பளிச் வானம்,குறையற்ற ஆக்சிஜன் நிரம்பிய காற்றும் காலம் காலமாய் நம் இழந்த வசந்தங்களை மறுபடியும் நமக்கு அறிமுகம் செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நம் ஆத்மாவின் விருப்பத்துக்கு செலவளிக்கும் நேரம் குறைந்து பரந்து விசாலமான பூமியை நாம் சிறை மாதிரி பாவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

இயற்கையை ரசிப்பவன் பொருளுக்கு அழையும் பொருளற்ற வாழ்க்கை வாழ்பவனின் பார்வையில் பைத்தியக்காரன்.

சமயத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைத்து ஏங்குவது என் உள்மனம் மட்டுமல்ல... உங்களுக்கும் ஏக்கம் இருக்களாம்.. இயற்கையை விரும்பும் என் சாதியாக இருந்தால். ஒரு நாள் விடுமுறையானாலும் புலன்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள்.

எப்போதாவது ஒரு சிட்டு குருவி தாகம் தீர்த்துக்கொள்ளும் நேர்த்திகண்டிருக்கிறீர்களா?

இடி இடித்து ஓய்ந்த் மழையில் கடைசி சொட்டு மழைத்துளிவிழும் இலையின் பச்சை கண்டுவியந்திருக்கிறீர்களா?

ஓய்ந்த மழை விட்டுச்சென்ற தண்ணீரிலும் / வயல் வரப்புகளிலும் செருப்பு விலங்கு இல்லாமல் நடந்து கால் குளிர்ந்து இருக்கிறீர்களா?

எப்போதாவது ஒரு முறை கடும் பசியிலும் உங்கள் உணவுப் பொட்டலம் பிரிக்கப்படும்போது இன்னும் 5 மணித்தியாலத்துக்கு உணவுகிடைக்காது எனதெரிந்தும் உங்களிடம் கையேந்தும் ஏழையின் கையில் உங்கள் உணவை கொடுத்து அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?

தூரத்துரயில் சத்தத்தின் சங்கீதத்தில் தூங்கியிருக்கிறீர்களா?

இலங்கை வானொலியில் 'இரவின் மடியில் நிகழ்ச்சியை" மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் ட்ரான்சிஸ்டரில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறீர்களா?

வெட்டப்பட்ட வேப்பமரத்துக்காக துக்கமாகி மனம் புழுங்கியிருக்கிறீர்களா?

பாலமரக்காய்களில் வெள்ளைப்பருப்பின் பால்சுவையில் படிக்க வந்த பாடம் மறந்த்துஇருக்கிறீர்களா?

நீண்ட கடல் ஓரத்தில் காற்றாட நடந்து கால் ஓய்ந்து மெளனம் அடைந்த்து இருக்கிறீர்களா?

அறிமுகம் இல்லாத ஊரில் மார்கழி குளிரில் சாலை ஓரத்துடீக்கடையில் தேநீர் அருந்தி சொர்க்கம் கண்டிருக்கிறீர்களா?

நிலவின் வெள்ளை வெளிச்சத்தில் தனியாக நடந்த்து இருக்கிறீர்களா?

பச்சை வயல் வெளியில் பம்ப்செட்டின் சத்தத்தை தாண்டி பேசும் உழவுப் பெண்களின் வார்த்தைக்கு காது கொடுத்து இருக்கிறீர்களா?

இதையெல்லாம் ரசிக்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கைதானா என்று நினைத்தது உண்டா?

--ZAKIR HUSSAIN

read more...