Latest Posts

Monday, July 25, 2011

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!(வீடியோ)

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?
இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவ முடியுமா? என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.
நன்றி: ராஜ் டிவி
தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கல்விக்கண் திறந்துகொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆகவேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

- அதிரைக்காரன் ஜமால்

Source : http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor


read more...

Friday, April 22, 2011

கோடைகாலப் பயிற்சி முகாம்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.  கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.  ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.

பாடங்கள்:  
                          ·    தீனியாத் பயிற்சிகள்
·        இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை
·        கம்ப்யூட்டர் கோர்ஸ்
·        Spoken English / Arabic
·        Personality Development
·        உயர்கல்வி வழிகாட்டுதல்கள்..  மற்றும் பல.

வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும். 

தொடர்புக்கு:  9566716216 / 9750969302 / 9894989230    
                
  அன்புடன் அழைக்கும்,
  AIM & ALM
  அதிராம்பட்டினம் 
read more...

Monday, April 11, 2011

ஓட்டு பணம் லஞ்சம் ஹராம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகிவிட்டது. தன் அணிக்கு ஒட்டுப்பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு ஓட்டுறிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவன் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு ஓசியில் காசு கிடைக்குது இதுக்கேல்லாமா ஒரு கட்டுரை? என்ற முனுமுனுப்பு இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அனுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அனுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்..




ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

அதிரையை ஆண்டுவரும் பாரம்பரியமிக்க இரு பெரும் கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள் குர் ஆன் ஆயத்துக்கள் தெரியவில்லை. யா அல்லாஹ் ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்துவிடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடருகிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விபடும்போது போது மிக வேதனையாக உள்ளது.

சில செய்திகள் நட்புவட்டாரத்தின் மூலமாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் ஓட்டுக்காக பணம் விநியோகம் மிக துரிதமாக நடந்துவருகிறது. ஒரு சில வீடுகளின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து 5000 ரூ வரை கொடுக்கப்படுகிறதாம். தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 1000ரூபாயில் 100ரூபாய் பட்டுவாடா கமிஷன் என்று சொல்லி எடுத்துக்கொள்கிறார்  சொல்லப்படுகிறது. என்ன கேவலமோ...  இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சீமான் சொல்லுகிறார், ஜெயலலிதா சொல்லுகிறார் ஏன் நாம் இதை வாங்கிக்கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவ்விருவர் சொல்லுவதால் அது நம் பணமாகிவிடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவது லஞ்சம், அது ஹராம் என்பது மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும்,  நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உங்கள் உறவுகளிடம் எடுத்துச்சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கு நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைக்கட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக பேசிவந்த நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து ஓட்டுமட்டும் மறந்திடாம உங்களுக்கு பிடித்த நல்ல வேட்பாளருக்கு போடுங்க.

அன்புடன் தாஜுதீன்

read more...

Sunday, April 10, 2011

49-o


read more...

போடாதிங்க ஓட்டு! எந்த சின்னத்தையும் பார்த்து

வேட்பாளர் : அதிரை மக்கள்
சின்னம் : போடாதிங்க ஓட்டு

அன்பிற்கினிய என் அதிரை பெருமக்களே, 

தாங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் யாருக்கும் போடாமல் இருக்குமாறு  அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள், 

  • நீங்கள் எனக்கு வாக்களித்தால் அனைத்து அரசியல் வா(ந்)திகளையும் உங்கள் ஊரை நோக்கி ஓடோடி வரச்செய்வேன்

  • உங்களின் கோரிக்கையை நாடரிய எடுத்து செல்வேன்
  • அதிரை மக்கள் உசாராகத்தான் இருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் புரிய வைப்பேன்.
  • உங்கள் பகுதிக்கு இனி எவர் ஓட்டு கேட்டு வந்தாலும் சுய நினைவோடு பேச வைப்பேன்

  •  உங்களூரில் ஓட்டுக் கேட்டு வந்தவர்களெல்லாம்  ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள், ஏசிக் கொண்டார்கள் கடமைக்காக ஊரில் உள்ளவர்களிடம் என்ன என்பதை அறிந்துக் கொண்டு மைக்கில் கத்தி சென்றார்கள், 

ஆனால் நான் அப்படியெல்லாம் செய்ய இயலாது, ஏனெனில் அவர்களுக்கும் எனக்கும் விதியாசம் வேண்டுமல்லவா, ஆக எனக்கு பிடித்து பேச மைக்கும் இல்லை நேரில் உங்களை சந்திக்க வாய்ப்பும் இல்லை, நானோ ஓட்டுச் சாவடிக்கு செல்லும் உங்களை அன்புடன் கேட்க்கத்தான் முடியும் , முடிவு உங்கள் கையில்,

இறுதியாக
எனக்கு இந்த ஒரு தடவை சந்தர்ப்பம் தாருங்கள், நான் செய்வதை முன் கூட்டியே சொல்ல மாட்டேன், வெற்றி பெற்ற பிறகு மற்றவயை செய்து காட்டுவேன்

நன்றி


read more...

Saturday, April 2, 2011

பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் - ரெங்கராஜன் MLA பேட்டி



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் இந்த தருணத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நம் பட்டுக்கோட்டை தொகுதி முக்கிய வேட்பாளர்களை நேர்காணல் எடுத்து வெளியிட்டால் இணையத்தின் ஊடாக பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு யார் தகுதியானவர் என்பதை அறிவதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம்.

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் இன்றைய சட்டமன்ற உறுப்பினருமாகிய ரெங்கராஜன் MLA அவர்களை அவர்களை அதிரைநிருபர் சார்பாக அலைபேசி வாயிலாக கேள்விகள் வைத்து பதிலைப் பெற்றோம் இதோ உங்களின் பார்வைக்கும் ஓட்டு அளிக்கும் உரிமை முடிவுக்கும் !

அதிரைநிருபர்: இதுவரை இரண்டு முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று இதுநாள் வரை இருக்கிறீர்கள் அதிராம்பட்டினத்திற்கு எவ்வகையான நலத்திட்டங்கள் / நன்மைகள் செய்திருக்கிறீர்கள் பட்டியலிடுங்களேன் !?

M.L.A ரெங்கராஜன்: முதலில் மிகவும் சந்தோஷம் உங்களிடையே பேசுவதில், அதிராம்பட்டினத்தில் பொது மருத்துவமனைக்கு ஏற்கனவே நாற்பது இலட்சம் செலவில் புதியக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் ஐம்பது இலட்சம் நிதியுதவி பெற்று அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் மூலமாகவும் 17 இடங்களில் சிமிண்ட் சாலைகள், சமுதாயக் கூடங்கள், ரேஷன் கடைகள் அவைகள் அனைத்தையும் அமைத்து முடிக்கப்பட்டிருக்கின்றன, மீனவர்கள் மீன்பிடித்து வருபவர்களின் பகுதிகளில் நீண்ட நாட்களாக விளக்கு வசதியில்லை அங்கே விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர்கள் பகுதியிலே சமுதாயக் கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இஸ்லாமிய பெருமக்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் சிமிண்ட் சாலைகள் போடப்பட்டிருக்கிறது. புதிய பஸ்டாண்டு அமைவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறேன். ஏற்கனவே மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அவர்களால் அங்கே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது, அதேபோன்று முயற்சிகளாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் நலத்திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது, இனி வருங்காலத்திலும் நல்லத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பாக இருப்பேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து பெரும்பாலான மக்களின் அவசிய கோரிக்கைகள் உங்களுக்குத் தெரியுமா அல்லது உங்களின் கவனத்திற்கு வந்திருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தில் எங்கே பார்த்தாலும் வடிகால் (drynage) வசதிகள் செய்துதரும்படி எங்கே பார்த்தாலும் கேட்கிறாங்க மீண்டும் வெற்றிப் பெற்று வந்தால் அதிராம்பட்டினம் பகுதியிலும் முழுமையாக வடிகால் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எல்லா வகையான என்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்க கண்டிப்பாக முயற்சிசெய்வேன்.

அதிரைநிருபர்: கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை அதிராம்பட்டினம் வந்திருக்கிறீர்கள் ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தைப் பொறுத்தவரையிலே மக்கள் அழைத்தார்கள் நான் வரத் தவறியது கிடையாது. அதுவே அல்லாமல் ஊரிலிருக்கும் நாட்களில் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது நான் அதிராம்பட்டினத்திற்கு சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்திருக்கேன். அங்கே நடக்கக் கூடிய சுக துக்கங்களில் கலந்து கொண்டு வந்திருக்கேன்.

அதிரைநிருபர்: எங்களூர் பேருந்து நிலையம் ஏன் இதுவரை புதிதாக்கப்படவில்லை ? யாரும் உங்களிடம் இதைப்பற்றி கேட்கவில்லையா ?

M.L.A ரெங்கராஜன்: பேருந்து நிலையத்திற்கு கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்தாயிரம் இலட்சம் பணம் தேவைப் படுகிறது அதை நாங்கள் முழு முயற்சி எடுத்து மரியாதைக்குரிய முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் மறைந்த திரு எம்.எம்.எஸ் அவர்களோடு நானும் சென்னைக்கு சென்று பல்வேறு முயற்சிகள் எடுத்து அதன் பின்பு பேரூராட்சி பொது நிதியிலிருந்து கட்டுவது என்று அவர் ஒரு முடிவு எடுத்து அதைத் தொடர்ந்து மக்களும் நல்ல பஸ்டாண்டு தேவை என்றும் கேட்டார்கள் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. நிச்சயமாக இந்தப் பணியை முழுவதுமாக நான் முடித்து வைப்பேன், இன்னும் சொல்லப் போனால் மீண்டும் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபத்தி ஐந்து இலட்சம் வரை அதற்காக ஒதுக்கீடு செய்து கொடுத்து பேருந்து நிலையம் புதுப்பிக்கபடும் என்று இந்தருணத்தில் வாக்குறுதியளிக்கிறேன்.

அதிரைநிருபர்: மத்தியிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதனைக் கொண்டு எங்களது ஊருக்கு என்ன நனமைகள் செய்திருக்கிறீர்கள் இதுவரை ?

M.L.A ரெங்கராஜன்: மத்திய அரசுடைய திட்டங்கள் என்பது நம்மால் நேரடியாக செய்ய முடியாது மத்திய அரசின் நிதிதான் மாநில அரசு மூலமாக எல்லா இடங்களுக்கும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிராம்பட்டினம் பகுதியிலே பல்வேறு நபர்களுக்கு மத்திய அரசுடைய கல்விக் கடன் பல்வேறு மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அதேபோன்று வாங்கதவர்களுக்கும் தொடரும்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து மக்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பு அகல இரயில் பாதைத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டிலும் ஏதும் சொல்லப்படவில்லையே? யாரேனும் உங்களிடம் எங்கள் ஊருக்கு அகல இரயில் பாதை என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்களா ? ஏன் இன்னும் தடைபட்டு இருக்கிறது !?

M.L.A ரெங்கராஜன்: முதல்ல வந்த காரைக்குடியிலேயிருந்து அதிராம்பட்டினம் திருத்திறைப்பூண்டி வழியாக சென்ற மனோரா எக்ஸ்பிரஸ் போனது பார்த்தீங்களா ! முதல்ல அந்தப்பாதையை அகலப் படுத்திகிட்டு இருக்காங்க. அதற்கான நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது அதற்கான முயற்சிகள் எடுத்து அங்கிருக்கக் கூடிய பாதையாகி இரயிலை விட்டோம்னு சொன்னாலே நம்முடைய பெரும்பாலான நம்முடைய நெருக்கடி தீர்ந்திடும் அதற்கான முயற்சியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதற்காக நம்முடைய பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் திரு பழனிமாணிக்கம் அவர்களும் அதற்கான முயற்சியை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கின்றார் வருங்காலங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற முழுமையாக நான் மற்றும் கூட்டனி கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவோம்.

அதிரைநிருபர்: இந்தத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் உங்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் எந்த அளவுக்கு உள்ளது ?

M.L.A ரெங்கராஜன்: நல்ல முறையில் செய்திகிட்டு இருக்காங்க கூட்டணிக் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் வெற்றிக்காக பாடுபடுகிறார்கள்.

அதிரைநிருபர்: எங்களது ஊர் பழம்பெரும் தலைவர் மறைந்த எம்.எம்.எஸ். அப்துல் வஹாப் அவர்களின் இழப்பு காங்கிரஸ் கட்சியினுடைய ஓட்டு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஒரு கருத்து நிழவுகிறதே ! இச்சூழல் பற்றி என்ன நினைக்கிறீங்க !?

M.L.A ரெங்கராஜன்: மறைந்த எம்.எம்.எஸ் மறைவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஆனால் எம்.எம்.எஸ். குடும்பத்திலுள்ளவர்கள் கிட்டத்தட்ட நூறு பேர்கள் ஒவ்வொருவரும் எம்.எம்.எஸ் அவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: பேருந்து நிலையம் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது அதனைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அங்கே என்னதான் பிரச்சினைகளைச் சொல்லுங்களேன் ? தீர்வுதான் என்ன ?

M.L.A ரெங்கராஜன்: நான் முன்னபே அறிந்த விஷயம்தாங்க அதுல வந்து சில சட்டச்சிக்கல்கள் கொஞ்சம் இருக்கிறது இரண்டு தரப்பாரும் பேரூராட்சி நிர்வாகமும் அதனை தீர்த்துக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அதை ஒரு அமைப்பு கையில் எடுத்துச் செய்றாங்க அவங்க சற்று இறங்கி வந்து செய்து கொடுத்தாங்கன்னு சொன்னா பேச்சு வார்த்தை முலமாக நிச்சயமாக தீர்க்கமுடியும். அதை வரக்கூடிய காலங்களில் செய்து முடிப்பதற்கு எவ்வித சட்டச் சிக்கல்கள் இல்லாமல் என்னால் ஆன நடவடிக்கைகள் என்னன்ன எடுக்க முடியுமோ அத்தனை நான் எடுக்க தயாராக இருக்கிறேன். (கிளைக் கேள்வி : இதற்கு ஒரு கால அளவு சொல்ல முடியுமா முக்கியமாக தேர்தல் நேரமாக இருப்பதால் ?), அதாவது பெரியவர் எம்.எம்.எஸ் அவர்கள் தலையிட்டுச் செய்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களும் நல்ல முறையில் முடித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம் ஆனால் அவர்களின் மறைவு காரணமாக தற்போது அம்முயற்சி தடைபட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் நானே நேரில் தலையிட்டு ஆறுமாத காலத்திற்குள் நிச்சயமாக சுமூகமாக தீர்த்து வைப்பேன்.

அதிரைநிருபர்: பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் இரண்டு பெறும் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் இத்தொகுதி வெற்றிக்கு மிக முக்கியமாக அதிராம்பட்டினத்து முஸ்லீம்களின் வாக்குகளும் ஒரு காரனியக இருக்கும் என்று, கடந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற உங்களுக்கும் நன்றாகத் தெரியும். சரி உங்களை வெற்றியடைய செய்த அதிரை வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்திருக்கீங்க இனிமேல் என்ன செய்யலாம் என்று எண்ணியுள்ளீர்கள் ?

M.L.A ரெங்கராஜன்: அதாவது எனக்கு அரசியலில் முகவரி அளித்தது அதிராம்பட்டினம்தான் அதற்காக என்னால் முடிந்தவரை நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். அதிராம்பட்டினத்தைப் பொருத்தவரை எந்த திட்டங்களிலும் குறைகள் வைக்கவில்லை வருங்காலத்தில் அவர்களின் மிகப் பெரிய பிரச்சினையான வடிகால் பிரச்சினையை தீர்த்து வைப்பதுதான் ரொம்ப முக்கியம். பெரும்பால சாலை வசதிகள் 90%க்கு முடிக்கப்பட்டு விட்டன, ஆனால் வடிகால் பிரச்சினை என்பது அவர்களுக்கு தீராத பிரச்சினையாக இருக்கிறது நிச்சயமாக அது ஒரு மேஜர் ஸ்கீம்னு சொல்லுவேன் மிகப் பெரிய திட்டமாக அதனை எடுத்து நிச்சயமாக செய்து கொடுப்பதும் அதே போன்று பேருந்துநிலையத்தையும் அங்கே ஆரம்பிக்கப்பட பணிகளை தொய்வின்றி முடித்து வைப்பதும் நான் அவர்களுக்கு செய்யக் கூடிய நன்றியாகும்.

அதேபோல் அகல இரயில் திட்டத்தைப் பொருத்தவரையில் என்னுடைய முயற்சி என்பது முழுமையாக இருந்து கொண்டிருக்கும். அதேபோல் அரசு மருத்துவமனையில் சில குறைபாடுகள் இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள் அங்கே 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து செய்து கொடுப்பேன். அதாவது 108 அம்புலன்ஸ் கோரிக்கை பற்றியும் கொடுத்திருக்கிரார்கள் அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். அதேபோல் தீ அணைப்பு நிலையம் ஒன்று அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அங்கு கொண்டு வர முடியும், தீ அணைப்பு நிலையம் அமைவதற்கு நிச்சயமாக என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன்.

அதிரைநிருபர்: உங்களுடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது ? வெற்றி பெற்றிடுவோம்னு முழு நம்பிக்கை இருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: நிச்சயமா ஜனநாயக முற்போக்கு கூட்டணி இன்னைக்கு எனக்காக திராவிட முன்னேற்ற கழகம் உட்பட முஸ்லீம் லிக், தவ்ஹீத் ஜமாத் ஆகிய நண்பர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்ற இயக்க நண்பர்கள் அனைவரும் நல்ல முறையிலே வெற்றிக்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இரண்டு முறை வெற்றி பெற்றது போல் இந்த முறையும் மீண்டும் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி அமையும்.

அதிரைநிருபர்: உங்களுக்கும் எதிரணியில் இருக்கும் வேட்பாளர் திரு செந்தில் குமாருக்கும் இடையே வித்தியாசங்களை நீங்களே சுருக்கமாக சொல்லுங்களேன்.

M.L.A ரெங்கராஜன்: ஐம்பது வருடங்களாக அரசியலில் எங்களது குடும்பம் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த குடும்பம், பத்தாண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒருவனாக இருந்து பட்டுக்கோட்டைப் பகுதியில் சாதிரீதியான மதரீதியான மோதல்கள் இல்லாமல் நல்ல முறையிலே இந்தத் தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளேன். வருங்காலத்திலும் அது தொடருக்கக் கூடிய வகையிலே என்னுடைய நிலை அப்படியே தொடரும். எதிர்கட்சியில் இருப்பவரைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

ப்பேட்டியை எழுத்து வடிவில்தான் பதிவோம் என்றும் சொல்லிட்டோம். நம் தொகுதிக்கு நல்ல தகுதியானவரை தேர்தேடுத்தாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்துள்ளோம்.

அன்பார்ந்த அதிரை மக்களே இதே உங்கள் பார்வைக்கு வைத்துவிட்டோம். மற்ற வேட்பாளர்களுடன் இந்த வேட்பாளரை தரம் பார்த்து இனி நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள் யாருக்கு ஒட்டளிப்பது என்று.

வேட்பாளருக்கும், ஓட்டுப்போடப்போகும் மக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

-- அதிரைநிருபர் குழு
read more...

பட்டுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார் பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் இந்த தருணத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நம் பட்டுக்கோட்டை தொகுதி முக்கிய வேட்பாளர்களை நேர்காணல் எடுத்து வெளியிட்டால் இணையத்தின் ஊடாக பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு யார் தகுதியானவர் என்பதை அறிவதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம். முதன் முதலில் பட்டுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை அதிரைநிருபர் சார்பாக அலைபேசி வாயிலாக நேற்று இரவு சில கேள்விகள் வைத்து பதிலைப் பெற்றோம். இதோ உங்களின் பார்வைக்கும் ஓட்டு அளிக்கும் உரிமை முடிவுக்கும் !

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்திற்கு எப்படி நீங்கள் அறிமுகமானீர்கள் ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நான் ஏற்கனவே 2006ல் வேட்பாளராக இருந்திருக்கிறேன், வியாபர ரீதியாக பழக்கமிருக்கு, அரசில் ரீதியாகச் சொல்லனும்னு சென்ற முறை தேர்தலில் நின்ற வேட்பாளர் என்றுதான் அறிமுகமானேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்திற்கு எவ்வகையான நலத்திட்டங்கள் அல்லது நன்மைகள் செய்வதாக வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கிறீர்கள்? விரிவாகச் சொன்னால் நல்லதாக இருக்கும் !

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : ஊரிலிருப்பவர்களிடம் எங்களது அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகளிடமும் கேட்டிருக்கோம், பள்ளிவாசல் விபரம் எங்களது பொருப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள் அது சம்பந்தமாக வேலைகள் பார்த்துக் கொடுத்திருக்கிறார்கள். நலத்திட்டங்கள்னு லிஸ்ட்டு போட்டு கேட்கிறீங்களா ? இல்லை இல்லை இதுவரை நான் அவைகளுக்குப் போகவில்லை இன்னும் அதிராம்பட்டினத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகவில்லை, சிலதின்ங்களுக்கு முன்பு மேடம் (விஜயகாந்த் மனைவி) வந்தப்போ பஸ்டாண்டுப் பிரச்சாரத்திற்கு சென்றேன் அவர்களோடு அங்கே நிறைய மக்கள் வந்திருந்தாங்க. என்ன என்ன நலத்திட்டங்கள் வேண்டும் என்று லிஸ்ட்டு எங்களது நிர்வாகிகளிடம் அதிராம்பட்டினத்து மக்களின் தேவைகளை கேட்டு வாங்கச் சொல்லியிருக்கேன்.

ஒன்பாதம் தேதிதான் அதிரையில் ப்ரோகிராம் அங்கே, நாங்கள் அப்போதுதான் அது சம்பந்தமாக கலந்து பேசிகிட்டு பேசுவேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து பெரும்பாலான மக்களின் அவசிய கோரிக்கைகள் உங்களுக்குத் தெரியுமா ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : மக்களின் கோறிக்கையை இனிதான் கேட்டிருக்கேன், அவர்களும் தாயார் செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

அதிரைநிருபர்: கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை அதிராம்பட்டினம் வந்திருக்கிறீர்கள் ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நான் அடிக்கடி வருவேன், பிஸினஸ் நிறைய இருக்கு இங்கே.

அதிரைநிருபர்: எங்களூர் பேருந்து நிலையம் ஏன் இதுவரை புதிதாக்கப்படவில்லை ? யாரும் உங்களிடம் இதைப்பற்றி கேட்கவில்லையா ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அது பற்றியும்தான் என்னிடம் பேசியிருக்காங்க பேருந்து நிலையம் கட்டுவது விஷயமாக, தாமதம் ஏன்னு இதுவரை தெரியாதுங்க ! பிரச்சாரத்திற்கு இன்னும் அந்தப் பக்கம் போகவில்லை அதன் விபரங்களை கேட்டிருக்கேன்.

அதிரைநிருபர்: நீங்கள் வெற்றி பெற்றால் அதிராம்பட்டினத்திற்கு அடுத்து எப்போது வருவீர்கள் ? எந்த காரணத்திற்காக ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : முதலில் நன்றி சொல்ல வரனும், வேற மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வளவு விரைவில் செய்து கொடுக்க முடியுமோ அதனைச் செய்து கொடுக்கவும் அடிக்கடி வரவேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து மக்கள் யாரேனும் உங்களிடம் எங்கள் ஊருக்கு அகல இரயில் பாதை என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்களா?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நாங்களும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதிரைநிருபர்: தற்போதிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கராஜன் (எம்.எல்.ஏ) அதிராம்பட்டினத்திற்கு என்ன என்ன செய்யவில்லைன்னு உங்களால் சொல்ல முடியுமா ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அதாவது என்கிட்டே மக்கள் கேட்டது அவர் செய்றாரோ செய்யவில்லையோ, ஒரு நல்லது கெட்டது சொன்னாக் கூட வந்து பார்த்துட்டு போகட்டும்னு கூட வர மாட்டேங்கிறார் !!! கல்யாணம் காட்சிகள் வைத்து விருந்துக்கு வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் சொன்னாக் கூட வரமாட்டேங்கிறார்னு சொன்னாங்க... !!! மக்களுக்கு செய்திருப்பாங்க அதுக்காக ஒன்னுமே செய்யவில்லைன்னு சொல்லிட முடியாது

அதிரைநிருபர்: உங்க் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படியிருக்கிறது?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நல்ல பிரமாதமாக இருக்கிறது (கிளைக் கேள்வி : அதிராம்பட்டினத்திலிருக்கும் கூட்டனிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது ?) வெற்றி பெறுவதற்கு கூட்டனியில் செயல்படுறாங்க.

அதிரைநிருபர்: முக்கியமானதும் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பள்ளிவாசல் பிரச்சினைகள் பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அது ஏதோ தி.மு.க. வினர்தான் பிரச்சினை செய்வதாக சொல்லிகிட்டு இருக்காங்க !! (கிளைக் கேள்வி : என்ன மாதிரியான பிரச்சினை அதனை எப்படித் தீர்ப்பீர்கள் என்று சொல்ல முடியுமா ?) தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதனால் பிரச்சினைகள் செய்திகிட்டு இருக்காங்க அதுக்கு நாங்கள் எப்படித் தீர்த்து வைக்கனுமோ அப்படி தீர்த்து வைப்போம், விபரங்கள் கேட்டிருக்கேன் ஒன்பதாம் தேதிக்குள் அதெல்லாம் கரெக்டாக சொல்லுகிறேன், முக்கியமாக குதி ரீதியான அறிக்கையில் அதனை சேர்த்துக் கொள்வோம், அதிராம்பட்டினத்திற்கு இது, பட்டுக்கோட்டைக்கு இது, மதுக்கூருக்கு இதுன்னு அதெல்லாம் சேர்த்துக்கொள்கிறோம். அவர்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்ந்து சேர்த்துச் செய்வோம் நாங்கள்.

அதிரைநிருபர்: பட்டுக்கோட்டைத் தொகுதியில் பொதுவாக எந்த விஷயத்தை முக்கியமாக முன் வைத்து ஓட்டுக் கேட்கிறீங்க ?

தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : பட்டுக்கோட்டை தொகுதின்னு இங்கேயும் திரு. ரங்கராஜன் அவர்கள் இங்கேயும் தொகுதிப் பக்கம் வரவில்லை, நல்லத் திட்டங்கள் ஏதும் செயல்படுத்த மாட்டேங்கிறார். சரியாக அவர்கிட்டே நெருங்கி பேச முடியலை அவரைப் பார்ப்பது சாதாரன விஷமாக, ஓட்டுப் போடும்போது பார்த்தது அவரை அதற்கு பின்னர் பார்க்க முடியவில்லை.

அவரை நெருங்கிப் பார்த்தால்தானே மக்களின் நிறைகுறைகளை சொல்ல முடியும், அதனையும் தவிர்க்கிறார், வீட்டில் இருந்து கொண்டு பார்க்க மாட்டேங்கிறார். இதுமாதிரியெல்லாம் இல்லாம என்னைய எப்போதும் சாதாரனமாக வந்து என்னைப் பார்க்கலாம் பழகலாம். என்னை எந்நேரமும் கூப்பிடலாம். (கிளைக் கேள்வி : உங்களின் சார்பாக என்ன செய்வேன் என்று சொல்லி ஓட்டுக் கேட்பீங்க ?) தொகுதி சார்பாக அறிக்கை தயாரித்து வருகிறோம் அதனைக் கொண்டு செயல்படுவோம், நான் வெற்றி பெற்றால் செய்வேன் என்று சொல்லுவோம்.

ப்பேட்டியை எழுத்து வடிவில்தான் பதிவோம் என்றும் சொல்லிட்டோம். நம் தொகுதிக்கு நல்ல தகுதியானவரை தேர்தேடுத்தாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்துள்ளோம்.

அன்பார்ந்த அதிரை மக்களே இதோ உங்கள் பார்வைக்கு வைத்துவிட்டோம். மற்ற வேட்பாளர்களுடன் இந்த வேட்பாளருடன் தரம் பார்த்து இனி நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள் யாருக்கு ஒட்டளிப்பது என்று.

வேட்பாளருக்கும், ஓட்டுப்போடப்போகும் மக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

-- அதிரைநிருபர் குழு
read more...

Wednesday, March 23, 2011

த.த.ஜ விற்கு ஒரு அவசர வேண்டுகோள்!

அஸ்ஸலாமு அலைக்கும்!.


கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளவிருக்கும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அதன் தீவிர ஆதரவாளர்களுக்கும், சமுதாய நலனை முன்னெடுக்கும் நல்லுள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கும் சமுதாயத்தின் சார்பில் முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடந்தேறிய காட்சிகள் எல்லாம் நாம் நன்கறிந்ததே!. எல்லோரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின், சாதியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, பேருந்தில் இடம் பிடிக்க துண்டைப் போடுவது போல் கூட்டணியில் இடம் கிடைத்தால் போதும் என்ற அக்கறையைத்தான் நாம் கண்டோம்!. கொள்கை, கோட்பாடுகள், பொதுநலம் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான், அவரவர்கள் நடந்தார்கள். ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளையும், இனத்தை மட்டுமே, முன்னிலைப் படுத்தினார்கள். படுத்துகின்றார்கள்!.

சிறுபான்மை, முஸ்லிம்கள் என்ற கோஷங்கள் எல்லாம் தேர்தல் பிரசாரங்களில் மட்டுமே எதிரொலிக்கும். ஆனால் நம்மவர்களுக்கு தேர்தலில் நிற்க அவர்கள் ஒதுக்கி இருக்கும் இடங்கள் மிகவும் சொற்பமே!. அதிலும் பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட்கள் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் செய்துள்ள துரோகம் யாராலும் மன்னிக்க முடியாதது!. இந்த நிலையில்தான் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை நடத்துகின்றார்கள். முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இவர்கள் இம்முறையும் தங்களின் நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

வன்னியர்கள் வன்னியர்களுத்தான் ஆதரவு என்றும், தேவர்கள் தேவர்களுக்குத்தான் ஆதரவு என்றும், கொங்கு சாதியினர் அவர்களின் சாதிக்குத் தான் ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்கும்போது, நாம் மட்டும்தான் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்களின் ஓட்டு என்ற நிலைபாட்டில் இருக்கின்றோம்.

மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம்களுக்கே தேர்தலில் நிற்க இடம் கொடுக்காத நிலைதான் உள்ளது. எனவே முஸ்லிம்களின் வெற்றிடத்தினை நிரப்ப, தற்போது களத்தில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில் நாம் இப்போது உள்ளோம் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!.

முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை, நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதுபோன்ற கட்டாய நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஆதரவும் இந்த வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தேவையுள்ளதையும் அனைத்து முஸ்லீம் சமுதாயம் நன்றியுடன் எதிர்பார்க்கின்றது.

மமக, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினையும், ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, தமீம் அன்சாரி, ஆகியோரை புறக்கணிக்கும் நோக்கில், இந்த சமுதாயத்திற்கு கிடைக்க இருக்கும் பிரதிநிதித்துவத்தினை தங்கள் இயக்கம் தடுக்க வேண்டாம் என்று இந்த பெரும்பாலான முஸ்லீம்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க ததஜ வின் ஆதரவை இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 30க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் இந்த தேர்தலில், நாம் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலையில் உள்ளோம். இது போன்ற எண்ணிக்கை மீண்டும் அமைவது சில நேரங்களில் சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே!.

ஏதோ ஒரு சிலர் செய்யும் விசமத்தனத்தினால், ஒட்டு மொத்த இயக்கங்களையும் நாம் எதிரிகளாக பார்க்க வேண்டாம். நாதியற்று கிடக்கும் இந்த சமுதாயத்தை சீண்டிப்பார்க்க பலர் காத்து கிடக்கின்றனர். நாமும் தெரிந்தோ தெரியாமலோ நம் செயல்பாடுகளினால் அதற்கு உடன்பட்டு விடுகின்றோம். நம் சகோதர சண்டை, மன வேறுபாட்டை எல்லாம் காரணம் காட்டி இந்த தேர்தலில் ம.ம.க/எஸ்.டி.பி.ஐ மற்றும் பிற அரசியல் கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, முன்பு சேலத்தில் எடுத்திருக்கும் முடிவை சென்னையில் கூட உள்ள பொதுக்குழுவில் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று மனதார நம்புகின்றோம். யாருக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்க தங்களின் இயக்கத்திற்கு முழு உரிமை உள்ளது என்றாலும், இது போன்ற கோரிக்கையையும் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.

அரசியலில் அடிமைபட்டுக் கிடக்கும் இந்த சமுதாயம், அரசியலில் விழிப்புணர்வு ஏற்பட, நம் கோரிக்கையை நாமே நிறைவேற்றிக் கொள்ள, நம் பிரநிதித்துவம் சட்டமன்றங்கள் உட்பட அணைத்து அரசு மன்றங்களிலும் இன்றியமையாதது. எனவே அரசியலில் நிற்க மாட்டோம் என்ற முடிவையும் ததஜ இனி வரும் காலங்களின் சூழ்நிலையை மனதில் கொண்டு, அதையும் மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

முஸ்லிம்களின் முன்னுரிமையே, என்னுரிமை! என்ற முழக்கத்துடன்.....

- அதிரை முஜீப்

read more...

Friday, March 11, 2011

முயற்சி செய்து பாருங்களேன்


As Received 

உங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை
அறிய  SMS  செய்து அவரின் குற்றப் பின்னணியை
அறிந்து எச்சரிக்கையாக வாக்களியுங்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: 
திமுக: 39, 
 பாமக: 15, 
 காங்கிரஸ்: 9, 
 அதிமுக: 8,  
மதிமுக: 2, 
 இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச்
30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.
read more...