Showing posts with label தேர்தல்2009. Show all posts
Showing posts with label தேர்தல்2009. Show all posts

Tuesday, May 5, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST
read more...

Sunday, April 12, 2009

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.



உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுகிறார்!


நக்கீரன் சர்வே!

இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை

எம். அப்துல்ர‌ஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!

இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)


தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்

அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்

கொடுத்துவைத்தவர்கள்....!
read more...

Sunday, April 5, 2009

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!

தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

உங்கள் கருத்துக்களை பதிய இங்கே அழுத்தவும்!
read more...