Friday, July 16, 2010

பசிக்காக சாப்பாடு


பசிக்காக சாப்பாடு


சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் 'இஞ்சிமரப்பா"விற்க்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.

40 வயதுக்குள் 70 வயது "சாப்பாடு கோட்டா" வை முடித்துவிடுபவர்கள் கவனத்திற்க்க;


முதலில் சாப்பாடு பசிக்காக , பிறகு ருசிக்காக என பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது ஏற்க்கனவே அதிகம் சாப்பிட்டு ரப்பர் பேண்ட் மாதிரி பெரிதாக்கி வைத்துஇருக்கும் குடலை சாப்பாடு கொண்டு நிரப்புவது என ஆகி விட்டது.
இப்போதெல்லாம் நம் ஊரில் விருந்துக்கு பஞ்சமில்லை. இப்போது உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் திருமண விருந்தில் வயிறுமுட்ட வெலுத்துக்கட்டுவது பிறகு செறிமானத்துக்கு என பெப்ஸி, கோக் என கார்பனேட்டெட் சமாச்சாரங்ளில் சந்தோசப்படுவது ஒரு விதமான் அறியாமைதான். ஏற்கனவெ உள்ளே போன ஹெவியான சாப்பாட்டுக்கு இன்சுலின் தயாரிக்க சிரமப்படும் பேன்க்ரியாசஸ் " விட்டுருங்க காக்கா" என கையெடுத்து கும்பிடும்போது நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.

ஏனெனில் ஒரு 35 வயது மனிதனுக்கு தேவை 1462 கலோரி ஒரு நாளைக்கு போதுமானது , ஆனால் விருந்தில் சாப்பிடும் ஆட்டிறைச்சி மட்டும் [ உதாரணமாக 200 கிராம்] 738 கலோரியை தருகிறது. இதெற்க்கெல்லாம் செத்துபோன ஆடு கலோரி மீட்டரை கழுத்தில் கட்டிக்கொண்டு வந்து உங்கள் கனவில் வந்து செய்தி சொல்லும் என எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு. இனிமேலும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டால் தேவைக்காரவீட்டு ஆட்களிடம் சொல்லி கலோரியை ஆட்டிறைச்சியில் ப்ரின்ட் செய்ய சொல்லவேண்டியதுதான்.

நம் ஊரில் ஆட்கள் சமீப காலமாக நடப்பதை [ ராஜாமடம் ரோடு] பார்க்கிறேன். பெரும்பாலான ஆட்கள் "கார்டியோ வாக்" செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையோ என தெரிகிறது. முதல் பத்து நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 20 வது நிமிடத்திலிருந்து 35 நிமிடம் வரை முடிந்த்த அளவு வேகம் அதிகறித்து 35 - 45 நிமிடம் வரை மெதுவாக நடந்து பிறகு அமைதியான் இடம் பார்த்து அமர்ந்து அமைதி அடைவது கார்டியோவாக். இதனால் இதயம் பலப்படும், நம் கண்ணுக்குதெரியாமல் அடைபடும் ஆர்ட்டரியில் தெளிவான ரத்த ஓட்டம் தரும்.

சுத்தமில்லாத தண்ணீர் , உணவு மூலம் பரவும் கிருமிகளின் "அதபு" நம் ஊர் போன்ற இடங்களில் அதிகம்.முன்பு எல்லோரும் 'ஒற்றுமையுடன்" கழுவிய குளங்களின் மூலம் அமீபியாசிஸ் பரவி நம் ஊர்க்காரர்களின் பீஸில் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகள் வளர்ச்சி அடைந்து விட்டது.

தொடர்ந்து செரிமானகோளாரு இருந்தால் ஒருமுறை ஸ்கோப் செய்து அத்துடன் பயோப்சி செய்து விடுவது நல்லது. இப்போது பெரும்பாலானவர்களின் வயிற்றுப்பிரச்சினைக்கு காரணமான வில்லன் H.Pylori எனும் கிருமிதான். [ இது ரத்த பரிசோதனையிலும் தெரியும்.] இது இருக்கும் இடம் தேடி கொல்வதற்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மருந்து ஒரு வாரம் சாப்பிட்டு ஒருமாதம் கழித்து Breath Test டெஸ்ட் எடுத்தால் வில்லன் உங்கள் வயிற்றில் இருக்கிறாரா இல்லையா என சொல்லி விடும் .அதனால் தான் முன்பெல்லாம் வேப்பெண்ணை / விளக்கெண்ணை தருவார்கள் என சொல்ல வரும் வாசகர்களுக்கு இது கொஞ்சம் திமிர் பிடித்த கிருமி அவ்வளவு ஈசியாக சிக்காது.

இப்போது காலத்துக்கு ஒவ்வாத உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. [நாமும் அதைத்தான் விரும்புகிறோம்]. இதனால் அதிகம் GERD எனப்படும் வியாதி நெஞ்சு எரிச்சல் அதிகமாகி விட்டது. இதனாலும் இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 'சுத்தம் சோறு போடும் ,ஆனம் ஊத்தும்' என நாம் பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல விசயங்களை நம் வீட்டுக்கு கொண்டுவர மறந்து விட்டோம்.

வெளியூர் போனால் நாம் அதிகம் விரும்பும் சைவ உணவை நாம் மத சாயம் பூசி தூர வைத்து விட்டோம்.
கீழ்காணும் தத்துவ ஞானிகளிடம் கவனமாக இருக்க கடவது.

'எனக்கு தெரிந்து ஒரு நண்பன் சைவம்தான் சாப்பிடுவார், அவருக்கு ஹார்ட்லெ அடைப்பாம் இதுக்கு என்ன சொல்றெ?'

"டாக்டர்னா அப்படித்தான் சொல்வான் அவன் சொல் கேட்டா பட்டினிதான் கெடக்கனும்''

மற்றும்

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு--இனிமேல் நூறுதான் மாப்லே " என சொல்லும்போது 'ஆறிலேயெ உன்னை தப்பிக்கவிட்டது யார்?" என கேட்க தோன்றும்.இவனுக கிட்டே நம்ம ஸ்டேசன் எடுக்காது என விலகி விடுவது நல்லது.

எடை அதிகரிப்பு , கட்டுப்பாடு இல்லாத உணவு இவைகளில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன உடற்பயிற்சி இவைகளை ஒதுக்கிவீட்டு "நேரம் எங்கே கிடைக்குது" என சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் சுகாதார வாழ்க்கைக்கு நீங்கள் ஆப்சென்ட் ஆகி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரசென்ட் ஆக வேண்டும்.

மற்றபடி 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை தூர அனுப்பிவிடலாம்" போன்ற பழமொழிகளை நம்பி இருந்து விடாதீர்கள், அதற்க்கும் சுகாதார வாழ்க்கைக்கும் 100 சதவீத தொடர்பு இல்லை அதுமாதிரி பழமொழி எல்லாம் ஆப்பிள் வியாபாரிகளின் ஆடித்தள்ளுபடி வியாபார யுக்தி.

ZAKIR HUSSAIN
read more...

Sunday, July 4, 2010

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

கொஞ்சம் விலா வாரியாக எழுத இது ஒன்றும் அவ்வளவு சின்ன சப்ஜெக்ட் அல்ல. இதில் குறிப்புகள் யார் கொடுத்தார்கள் என்று எழுதினால் அவர் யார் ? அவரது பின்புலம் குறித்து 100 வார்த்தைக்கு மிகாமல் எழுத சொல்வீர்கள் அது சரி அது என்ன விலா வாரி...தெரிந்தவர்கள் 100 வார்த்தக்கு....

எப்போது நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க 'ஜல்புல்'வேலை செய்கிறொமொ அப்பவே நமக்கு உரிய "ஆப்பை' தீட்ட ஆரம்பித்து விடுகிறோம். சரி இங்கு ஈகொ எங்கு வந்தது....ஆம் நம்மை கவனிக்க நாம் பிரயத்தனம் செய்கிறோமே அதுதான் அந்த சனியன். இது சின்ன வயதில் "எம்புள்ளெ அந்த மாதிரியான புள்ளெ இல்லே' என்று மனித தவறுகள் மறைக்கபடுவதிலிருந்து மரணத்தின் தருவாயில் "எப்போ என் சொல்லு கேட்காமெ பொண்டாட்டி சொல்லு கேட்டானோ அவன் என் வீட்டு நெலப்படி [ இன்னும் நெலப்படி வைத்து கட்டுகிறார்களா?] மிதிக்க கூடாது " எனும் வைராக்கியம் வரை தொடர்கிறது.

இதற்க்கு காரணம் நமக்குரிய இமேஜ் ' நிரந்தரம்"எ எனும் தப்பான கணக்குதான். அப்படியெல்லாம் அது நிரந்தரம் இல்லை என்பதற்க்கு உதாரணம் இன்றைக்கு நம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டில் பெரும் மாறுதலை செய்த காமராஜரின் படத்தை காண்பித்து யார் என்று கேட்டால் 'தெலுங்கு சீரியலில் நடிக்கிரவரா? " என மாணவர்கள் கேட்கலாம் [ இமேஜ் நிரந்தரம்???]

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஈகோ நாளடைவில் இரத்த உறவுகளை முறித்துவிடும் உயிர்க்கொல்லி என்பது நிறைய பேருக்கு தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களும், உடன்பிறப்புகளையும் தேர்தெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நண்பனையும் , மனைவியையும் தேர்தெடுப்பதில் வேண்டுமானால் சாய்ஸ் உண்டு...அதனால்தான் இப்போது "சாய்ஸில்" செய்த தவறுக்கு நம் ஊரில் அதிகம் விவாகரத்துகள் மலிந்துவிட்டனவா?

நம் ஊரில் நான் அதிகம் பார்த்த ஈகோ:

வெளிநாட்டிலிருந்து வந்த என்னெ என் வீட்டில் வந்து விசாரிக்கலே

நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஹார்லிக்ஸ்/ பழம் வாங்கி வந்து பார்க்களெ

நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன் , எனக்கு சரியான மரியாதை கொடுக்கனும்.

நாங்க வசதியான குடும்பம் ...அவங்க அப்படி இல்லே.

எங்க வீட்டுக்கு பொம்பலெ கூப்பாடு இல்லெ.

பயணம் போகும்போது சொல்லிட்டு போகலெ


இதில் சில விசயங்கள் பாசம் சார்ந்து இருந்தாலும் பெரும்பாலும் இது ஈகோவின் அடிப்படையிலேயே இயங்குகிறது. என்று [ZEN ]ஜென் தத்துவம் சொல்கிறது..

"No matter What you do YOU ARE ALONE"

இதை சரியாக உணர்ந்தவர்கள் ஆப்பரேசனுக்கு நுழையுமுன் ஸ்ட்ரெச்சரில் வைத்துகொண்டு.."உங்களுக்கு இதற்குமுன் ஏதாவது ஆப்பரேஷன் நடந்து இருக்கிறதா?..பல் கட்டியதா? அலர்ஜி இருக்கிறதா என கேட்கும்போதும் . அனெஸ்தெசிஸ்ட் "ஒன்னு , ரெண்டு” எண்ணுங்க சொல்லும்போது லேசாக தெரியும் "நாம் தனியானவன் தான் " என்றுஆனால் வார்டில் இருந்து கொண்டே குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குதான் இன்னும் ஒரு சரியான "ஈகோ மீட்டர்' கண்டுபிடிக்க மருத்துவ துறை தவறிவிட்டது.

ஈகோ இப்படியெல்லாம் வளர்ந்து இப்போது சினிமாவின் ஆதிக்கத்தாலும் "நான் இந்த மாவட்டம் , நீ அந்த மாவட்டம் என்று வியாபித்து [ இந்த தமிழ் பயன்படுத்தி நாளாகிவிட்டது] இப்போது நம் ஊர்போன்ற இஸ்லாமிய மதரஸாக்கள் / பள்ளிவாசல் / நிறைந்த இடங்களில் "தெரு" 'இயக்கம்' "குடும்பம்' 'இனிசியல்" என்று புற்றுப்பிடித்திருக்கிறது.

வறுமையும் , நோயும் ஈகோவை அழிக்கும் ஆயுதம்..இதில் கடுமை இருக்கிறது..நாமாக உணர்ந்து மாற்றிக்கொண்டால் எல்லோருக்கும் ஒறே மாதிரி நீதி வழங்கும் இறைவனின் கருணை இருக்கிறது.


மற்றவர்களை மன்னித்து பாருங்கள் ...அதில் உள்ள சந்தோசமே தனி.

ZAKIR HUSSAIN
read more...