Sunday, February 21, 2010

துபாயில் அவன்

துபாயில் அவன்  என்றவுடன் யாரும், ஏதோ எம்.ஜி.ஆர் படம் என்று என்னிட வேண்டாம், இது ஒரு உண்மையான(கசப்பான) சம்பவம், ஆமாங்க , மூன்று வருடத்திற்கு முன் ஒரு இளைஞன் துபாயுக்கு பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் சென்ற அவனுடைய பயணம் வெறும் கனவாகவே போனதைப்பற்றித்தான் இங்கு எழுதுகிறேன்.

ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று சென்னையை சென்றடைந்த அவன் ஒரே சோகமாக காணப்பட்டான், நாம் இந்நாட்டை விட்டு, வீட்டை விட்டு பிரியபோகிறோமே என்று நினைத்தானோ என்று தெரியவில்லை. அன்று மாலை ஏர்போர்ட்டை சென்றடைந்தவுடன் அவன் ஏதோ ஒன்றை பார்த்த படியே நின்றுக் கொண்டிருக்க நானும் அவனுடன் சேர்ந்து பார்த்த பொழுதுதான் என் மனமும் லேசாக கனத்தது, அது என்னவெனில் 21 வயது மதிக்கத்தக்க இன்னொரு பையன் அவனுடைய தாயை விட்டு முதல் தடவை பிரிகிரானோ என்னவோ தெரியவில்லை, தைரியம் சொல்லவேண்டிய தாய் ஏனோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை கண்ட அவனுக்கும் எனக்கும் சற்று மனது கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் சுதாரித்து கொண்ட நான் இதெல்லாம் ஏர்போர்டில் சகஜம்தாண்டா, அதை கவனிக்காமல் நீ தைரியமாக கிளம்பு என்று சொல்லிவிட்டேன், பிறகு அவனும் போய் துபாயில் இறங்கியவுடனே அங்கு அவனுக்கு ஒரே மகிழ்ச்சி அவனுடைய நண்பர்களை பார்த்தவுடன், ஆஹா நமக்கு தெரிந்தவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்களே இனி நமக்கு கவலையே இல்லையென அவன் நினைத்ததுதான் தப்பு.

துபாயுக்கு போகுமுன் இவனுக்கு தங்குமிடம் மற்றும் சுற்று வட்டாரத்தை பற்றி ஒரு சில கற்பனையுடன் சென்று அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது, தாங்கும் அறையைப்பார்த்த இவனுக்கு மனதில் ஒருவகையான நெருடல், ஏனெனில் ஒரு சிறிய அறைக்குள்(20 x 20 )அவனோடு சேர்த்து பத்து பேர், ஒவ்வொரு சைடுலையும் பெர்த் போடப்பட்டு ஒரு பக்கத்துக்கு இரண்டு பேர் விதம் மொத்தம் 8 + கீழே படுப்பவர்கள் இரண்டுபேர் ஆக மொத்தம் 10 பேர், அப்பொழுதான் அவனுக்கு புரிந்தது இதுதான் பேச்சுலர் ரூமோ என்று, சுற்று வட்டாரம் சென்னையில் மன்னடி போன்று இருந்ததாம், 23 வருடங்களாக மூட்டை பூச்சி என்று தெரியாத அவன் அன்றுதான் பார்த்தானாம், அந்த பூச்சி  இரவில் அவனையும் விட்டு வைக்க வில்லையாம் கடித்து கடித்து கலைத்து போய் "பாவம் இவன் எவ்ளோ கடிச்சாலும் வாங்கிடுறான் இவன் நல்லவேன்ன்னு இவன விட்டுட்டு போயுடுச்சாம்", ஒவ்வொரு தடவையும்  அந்த மூட்டையை  பார்க்கும் போது , அவர்கள் masking tape மூலம் ஒட்டி எடுக்கும்போதுதான் நினைத்தேன், இந்த டேப் ஒரு வேலை இதுக்காகத்தான்  தயாரித்து இருப்பார்களோ என்ற எண்ணம் வந்ததாம் .

சரி வந்தது வந்தாச்சு இனிமேல் யோசித்து எந்த பயனுமில்லை என்று வேலை தேடும் படலத்தில் இறங்கிய இவனுக்கு முதல் 15 நாளாகியும் வேலையொன்றும் கிடைக்கவில்லையாம், அவன் போய் இருப்பதோ விசிட் விசா இன்னுமிருப்பதோ  கொஞ்ச நாள்தான் நாம் என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது, சரி கிடைத்ததில் முதலில் இருந்துக்கொண்டு வேறு நல்ல வேலையை தேடி கொள்ளலாமென்று நினைத்தான்  அப்பொழுதுதான்  அவனுக்கு இன்னொரு வேலையும் கிடைத்தது, அது கொஞ்சம் சம்பளம் அதிகம், வேலையும் அதிகம் அதோடு டார்ச்சரும்  அதிகம். வேறென்ன செய்வது இதுதான் நமக்கு விதியென்று அதிலேயே சிலகாலம் தொடர்ந்த அவனுக்கு நாளுக்கு நாள் டார்ச்சரும் அதிகமாகி கொண்டே போனது அப்படி அங்கு சகித்து கொண்டு இருந்திதுருந்தால் பெர்மனென்ட் விசா கிடைத்திருக்கும் ஆனால் டார்ச்சரோ அதிகம் , விசா முடியும் நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது, இனியும் தாங்க முடியாத அவன் அந்த கம்பெனியை விட்டு ஊருக்கு போக ஆறு நாட்களுக்கு முன் வெளியாகி விட்டு அவன் அடைந்த மன உளைச்சலும், துன்பங்களும் ஏராளம், பிறகென்ன விசாவுடைய நாட்களும் முடிந்தது   அவனுடைய கனவும் முடிந்தது.

இறுதியாக ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு 30 திர்ஹம் கொடுக்க வேண்டி இருந்தது ஊருக்கு போய் கொடுத்து கொள்கிறேனென்று சொல்லியும்  அவரும் அந்த பணத்தை வாங்காமல் விடவில்லையாம், விசிட்டில் துபாயிக்கு வேலை தேடிப்போகும் மக்களுக்கு இங்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லியாக வேண்டும், 

 வேலைத் தேடி செல்லுமுன்  நீங்கள் செய்ய வேண்டியவை
  •  நீங்கள் என்ன வேலைக்காக செல்லுகிறீர்கள் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். [ஏனென்றால் நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன், என்ன வேளை தேடி வந்திருக்கிறாய் என்று கேட்டால், ஏதாவது ஒரு வேலை என்பார்கள், அந்தளவுக்கு  அவர்களின் சுய முன்னேற்றத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.]
  • CV யை தெளிவாகவும் எம்ப்லாயருக்கு புரியும்படி தயார் செய்ய வேண்டும்
  • எப்படியெல்லாம் வேலை தேட வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் [உதாரணமாக : By paper , by website, by ஈமெயில்]
    உதாரணமாக ஈமெயில் மூலமோ, வெப்சைட் மூலமோ வேலை தேட விரும்பினால், நீங்கள் முதலில் அங்குள்ள recruitment agency வுடைய ஈமெயில் அனைத்தையும் சேகரிதுகொள்ள வேண்டும், பிறகு அங்குள்ள அணைத்து job searching வெப்சைட் அனைத்தையும் அங்கு போகும் முன்பே சேகரித்தால் நல்லது. இல்லையெனில் அங்கு ஒவ்வொருவருடைய கையையும் எதிர் பார்க்க வேண்டி வரும், குறிப்பாக அங்குள்ள மக்கள் ஊரில் பார்த்து என்ன மச்சான் என்று சொன்னவர்கள் அங்கு சென்றவுடன் எதோ தெரியாதவர்கள் போல் செல்வார்கள்.
    இதை ஏன் இங்கு சொல்லுகிறேனென்றால் அங்கு இறைவனுடைய உதவியும், அவனுடைய மாமுடைய உதவியும் இல்லையெனில், அவனுடைய நிலைமை வேறுமாதிரி போயிருக்கும்.
  • நாம் அங்கு சென்றால் யாரையும், எந்த ஒரு காரணத்திற்காகவும் எதிர் பார்க்ககூடாது என , செல்லுமுன் நீங்களே உங்களுக்குள் உறுதி எடுத்து கொள்ளுங்கள் .
கடைசியாக எந்த சோகத்தோடு சென்றானோ அதை விட அதிக சோகத்தோடு , 60   ஆயிரம் ரூபாயை இழந்தவனாக 2006 பிப்ரவரி மாதம் 17 ஆம்  தேதி காலை சென்னை வந்து சேர்ந்தான்  .
குறிப்பு : இன்னும் நிறைய எழுதலாம், அடக்கம் கருதி முடித்து விட்டேன், அப்புறம் இந்த கட்டுரையில் வரும் அந்த இருவரும்(அவன் , நான்) ஒருவரே, அவன்தாங்க  இந்த கட்டுரையை எழுதியது.
read more...

Tuesday, February 16, 2010

தற்காப்பு

தலைப்பு கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் உள்ளடக்கம் எப்படின்னு நீங்க கருத்து சொன்னதான் தெரியும், தற்காப்பை பற்றி எழுதும்போது சிலருக்கு கராத்தே, குங்-பு மற்றும் இதர கலைகள் தான் நினைவுக்கு வரும், ஆனால் இங்கு எழுத போவது அதைப்பற்றி அல்ல,

வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க, இறைவனின் உதவியால் நீங்கள் வைத்திருக்கும் பொருள் மற்றும் உங்களை சுற்றி உள்ள பொருளை  வைத்தே, உங்களை நீங்கள் காப்பற்றி கொள்ளலாம்,
அது என்ன பொருள்,
  • பேனா
  • சாவி
  • பல்குத்தும் குச்சி
  • மண்
  • மிளகாய்த்தூள்
  • ஜவ்வரிசி 
இதைபோல் ஏராளமான பொருட்கள் இருந்தாலும் இங்கு சிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்,
சரி மேலே குறிப்பிட்டுள்ள பொருளை எப்படி கையாளுவது என கேள்வி எழுகிறதா, முதலில்

பேனா


பேனாவை படத்தில் சொல்லப்பட்டவாறு பிடித்து கொண்டு , உங்களை தாக்க வரும்போது , ஒருகையை உங்களுடைய சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு ,இன்னொரு கையால் எதிராளியை தாக்க வேண்டும்.

சாவி
சாவியை படத்தில் சொன்னவாறும் பிடிக்கலாம் அல்லது உங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் வைத்துகொண்டு கையாளலாம்.


பல்குத்தும் குச்சி

இவை பெரும்பாலனரிடம் (குறிப்பாக பெண்களிடம்)  இருக்கும் , இது ஒரு அருமையான ஆயுதமென்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் இதை வெளியில் கொண்டு செல்வது எளிது, இவையை ஒன்றாகவும் பயன்படுத்தலாம், நிறையவும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இது பெரும்பாலான  ஆண்களிடம் இருக்காது, தேவைபட்டால் எடுத்தும் செல்லலாம்
மண்

இதைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லித்தர தேவை இல்லை, இருந்தாலும் நான் எப்படி கையாண்டேன் என்பதை உங்களுக்கு சொல்லித்தருகிறேன், யாரேனும் உங்களை நோக்கி வரும்போது, மண்ணிருக்கும் இடத்தை நோக்கி அவன் யுகிப்பதற்குள் சென்று கையில் மண்ணை எடுத்து தூவலாம், காலால் மண்ணை கண்ணை நோக்கி எத்துவது நல்லது. இவை இரண்டில் நான் காலைத்தான் உபயோகித்தேன்.
மிளகாய்த்தூள்
இது முக்கியமாக பெண்களுக்கு உதவும், இதை படிக்கும்போது கொஞ்சம் (ச்சில்லி)த்தனமாதான் இருக்கும், ஆனால் இது உதவுவது போல் எதுவும் உதவாது,  சரி எப்படி உபயோகிக்கலாம்? இதை வெறும் தூளாக கொண்டு சென்று தூவ முடியாது, ஆதலால் உங்களுகெல்லாம் தெரியும் விளையாட்டு தண்ணி துப்பாக்கி(Toys Water Gun), அதில் மிளகாய்த்தூள் கரைத்த தண்ணீரை நிரப்பி ஹான்ட் பாக்கில் வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும்போது சும்மா கண்ணுன்னு  அடிக்கலாம்
ஜவ்வரிசி

பெயரைக்கேட்டாலே ஜவ்வுனு ஓட்டுற மாதிரி இல்லே, இதை பொது இடங்களில் உபயோகிக்க முடியாவிட்டாலும், இதன் பலன் தெரிந்தவர்கள், கண்டிப்பாக இதை நாடாமல் இருக்க மாட்டார்கள், இது உங்களுடைய வீட்டின் முன் யாரேனும் தொல்லை கொடுத்தால் பயன்படுத்தலாம், எப்படி அது?

ஜவ்வரிசியை அரை வேக்காடாக வேக வைத்து கொள்ள வேண்டும், எப்போதும் சூடு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டு , யாரேனும் வீட்டிற்கு முன்  ரொம்ப தொல்லை கொடுத்தால் அதை அகப்பையில் எடுத்து எறிந்தால் போதும் அவ்வளவுத்தான் ஜவ்வுனு ஒட்டிக்கொண்டு எடுக்கும்போது தோளோடுதான்  வரும்.

மேலே இவை அனைத்தையும் இக்கட்டுரையின் மூலம் சொன்னதின் நோக்கம், இப்படியும் தற்காத்து கொள்ளலாம்  என்பதற்காக  தான். இதை விட உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், அப்படியானால் எனக்கும் சொல்லித்தாங்களேன்.
read more...

Monday, February 15, 2010

கவலை மறந்து சிரிங்க

படித்த பிறகு என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை, படிச்ச பிறகு கொஞசம் சத்தமாத்தான் சிரிங்களேன்...
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? 
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

 எதுக்காக இந்தியா பூராவும்போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
 தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

 
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகாகவிபாரதி மூணு பேருமே செம பிகர்!
 யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
 
 ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
 
பஸ் ரூட்ல பஸ் போகும்ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
 
 அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
 
பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
 

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
  
டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!
 ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா?
 
------ பில் கேட்ஸ் விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
  
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியேஎன்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பாஎனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!
 
கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்உங்க மொபைல்'வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டுஎன்றுதான் வரும்!! எப்பூடி.
read more...

Tuesday, February 9, 2010

ஒரு பெட்டியின் கதை


பெட்டி(carton) என்ற உடனே வெளிநாட்டில் உள்ள நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது விடுமுறையில் ஊருக்கு போற நாளைத்தான், ஆக ஒருதடவை ஊர் போய் திரும்பியதும், சில பேர் அதை பத்திரமாக வைப்பதுமுண்டு, சிலபேர் அதை ரோட்டில் உள்ள குப்பைதொட்டிக்கு பக்கத்தில் வைத்ததுமுண்டு .

இந்த இரண்டுபேருல, ரெண்டாவது ஆளிருகிறாரே அவர், அவருக்கே தெரியாமே ஒரு பெரிய உதவியை செய்கிறார்,
ஆமாங்க , இதன் மூலம் துப்புறவு தொழிலாளி முதல் குப்பை  பொறக்கும் ஆள் வரை பயனடைறாங்க,

"ஒருமுறை மாமாவோடு என் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தேன், உங்களுக்கெல்லாம் தெரியும் இங்கு  குப்பை வண்டிக்கு பின்னால் இருவர் ஏதோ பஸ்ஸில் தொங்குவதுப்போல் தொங்கிக்கொண்டு போவார்கள், அவர்களுக்குதாங்க இந்த பெட்டி பெரிதும் பயன் தருகிறது (இங்கு நான் பெட்டியைமட்டும் மையமாக வைத்து எழுதுகிறேன்,மற்ற பொருளும் பயன்தரும்). நாங்கள் அவர்களுக்கு பின்னால் கிட்டத்தட்ட மூன்று குப்பை தொட்டியை கடந்திருப்போம் (ஏனென்றால் அந்த வண்டி ரோட்டை அடைத்து கொண்டு சென்றதால்) எடுத்த பெட்டியை அவர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அதை பாதுகாத்து எடுத்து சென்ற விதம் என்னை நிறைய யோசிக்க வைத்தது, அவருடைய இந்த செயலுக்கு பின்னால் அவருடைய வறுமையும், கல்வியின்மையும்தான்  என் கண்ணுக்கு தெரிந்தது "

ஆகையால் ஏதேனும் பொருளை   உங்களுக்கு தேவை இல்லாத பட்சத்தில்  , அது மற்றவர்களுக்கு  தேவைப்படுமென்று நினைத்தால், அதை அப்படியே குப்பைத்தொட்டியின் உள்ளே போட்டு  விடாமல் வெளியே  வைத்தால்  , அவர்களுக்கு பயன் தரும் , இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் நீங்கள்  நிறைய நன்மையை பெற்றுக்கொள்வது  மட்டுமல்லாமல் , அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தினமும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதிர்கொள்ளுங்கள்.
__________________________________________________________________

SUFFIX said... இன்னும் இந்தப் பெட்டிகளை எடுத்து ஏழை மக்கள் பலர் சந்தையில் விற்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தும் கொள்கிறார்கள், மீள்சுழற்சிக்கும் (Recycle) பங்களிக்கிறது.
read more...

Tuesday, February 2, 2010

பெற்றோரும் பிள்ளைகளும்

என்னங்க! அப்படி ஒரு பார்வை கட்டுரையின் தலைப்பை பார்த்து, ஆம் முதல் கட்டுரையை எழுதிய பிறகு அடுத்த தலைப்பை தேர்ந்தெடுபதற்குள் போதும் போதும்னு போச்சு, சரி விஷயத்துக்கு வருவோம், (இச்சிறு தந்தைக்கு)இச்சிரியோனுக்கு   தெரிந்த,கற்ற சில விஷயங்களையும் உங்கள் முன் பரிமாறி கொள்ளலாமென ஆசை, நான் கல்லாத பல விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமென ஆசை.

ஒரு சிறந்த பெற்றோர்  என்று சொல்லுவதற்கு, அவரை எப்படியெல்லாம் உதாரணம் காட்டலாம் :
  • மகத்தான கடமைகளை அறிவார்
  • விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்
  • தாராளமாகச் செலவிடுவார்
  • ஆண், பெண்ணிடையே வேறுபாடு காட்டமாட்டார்
  • சமத்துவம் பேணுவார்
  • உயர்பண்புகளை வளர்ப்பார்
ஆஹா இவ்ளோவா !, ஆம், இவை அனைத்தும் ஒரு பெற்றோரிடம் இருந்து விட்டால் , அந்த பிள்ளைக்கு  இனி என்னங்க வேண்டும் இந்த உலகில், நிச்சயமாக ஒழுங்கற்ற பெற்றோரினால் சீரழிந்து கொண்டிருக்கும் எத்தனையோ பிள்ளைகளை பார்கதான் செய்கிறோம் , நாம் அனைவரும் சிறந்த பெற்றோர்களாக விளங்க, அந்த இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.

மேற்சொன்ன  அனத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நல்ல சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.

உபகாரம் , போதுமென்ற மனம், மகிழ்ச்சி ஆகிய குணங்கள் மூலம்தான் ஒரு குழந்தையை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்ல முடியும். நம் பிள்ளைகளின் உள்ளத்தில் இடம் பிடித்து  , பிறகு  அவர்களுக்கு  நற்பண்புகளை புகுத்த வேண்டும், பிள்ளைகளின் மனதில் எப்படி இடம் பிடிப்பது, இதோ சில வழிகள்:
  • அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்
  • அவர்களை முகமலற்சியுடம் அணைத்து அன்புகாட்ட வேண்டும்
  • மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து உற்சாக படுத்த வேண்டும்
  • முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நாசுக்ககவும்(நளினமாகவும்) , முரட்டுதனமின்றி (கொடூரத்தனமின்றி) சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.
  • கடைசியாக நீங்கள் உங்கள் பிள்ளைங்களுக்கு ரோல் மாடலாக(முன்மாதிரியாக) ஆகி காட்ட வேண்டும்.
முற்றும்...
    read more...