உலகக்கல்விகளில் உயர்ந்தவற்றுள் நான் அதிகம் ஆச்சர்யப்படுவது "மற்றவர்களை அறியும் அறிவு" [Character Study] இது பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முஸ்லிம்கள் எனொக்ராம்[ENOGRAM] என்ற ஒரு சூப்பர் சமாச்சாரத்தை உலகுக்கு தந்து இருக்கிறார்கள்.
வழக்கம்போல் முஸ்லிகள் ஒற்றுமை இல்லாததால் இந்த உயர்கல்வியை மங்கோலியாவில் கோட்டைவிட்டு
[ அல்லது மற்றவர்களால் 'லவட்டப்பட்டு'] சமீபத்திய நூற்றாண்டில் க்ருட்ஜேவ் [GRUDJEVE] என்ற ரஷ்ய ஞானியால் அறிமுகம் ஆகியிருக்கிறது.
.
கயவனை அறியாமல் நடப்பதும் ஒருவித தூக்கநிலைதான்.
மனத்தின் செயல்பாடு அறிந்தவற்றிலிருந்து இயங்கும்.
சமயங்களில் நல்ல நண்பனாக பழககூடியவர்கள் கூட "ரூம் மேட்' ஆக முடியாது.
மாறிவரும் காலத்தை மனது ஏற்றுக்கொள்வதில்லை
இவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க / பேச முடிகிறதோ தெரியவில்லை. சிலரின் வேடிக்கையான நடத்தையை இங்குபார்க்கலாம்;
1. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் [மூன்றாமவர்] இடையில் பேச முற்படும்போது “Excuse Me” சொல்வதெல்லாம் ஏதோ தேசக்குற்றம் மாதிரி யாரும் செய்வதில்லை.
2. பெண்கள் இருக்கும் இடத்தில் சத்தமாக பேசுவது [ இவர் இருக்கிறார் என தெரியனுமாம் ] ஆனால் இப்போது உள்ள பெண்களால் இவன் ஒரு காமெடிபீஸா அல்லது வெவரமான பார்ட்டியா என இவன் போட்டிருக்கும் உடுப்பை வைத்தே சொல்லிவிடமுடியும் என்பது இது போன்ற பார்ட்டிகளுக்கு தெரியாது.
3. இவர்கள் நாம் பேசி முடிக்குமுன் தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்; செய்தியை முழுமையாக கேட்க்கும் சர்க்யுட் இவர்களிடம் "பூசனம்" பூத்திருக்களாம்.
இளைஞர்கள் யாராவது புதிதாக தொழில் ஆரம்பிக்க கீழ்க்கண்ட வசனம் பேசுபவர்கள் பக்கதில் கூட நிற்க்கவேண்டாம்:
1. "என்னதான் எண்ணையை தேச்சிகிட்டு பெரண்டாலும் ஒட்டுற மண்ணௌதான் ஒட்டும்"
2. "தொடர்ந்தாப்லெ ஒருத்தன் பணக்காரணாக இருக்க முடியாது"
3. "பணம் ஒரு பேய்"பணம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும்:
இதுபோன்ற பழமோழியை கண்டுபிடித்தவன் தான் கையிலே சிக்கமாட்டுக்கிறான்
மற்றும் சில கேரக்டர்கள்
1. யாரையும் முகத்துக்குமுன் புகழ்வது / அவன் போன பிறகு வைவது
2. நண்பர்களிடம் பேசும்பொது பில்கேட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மெயின்ரோடு/கடைதெருவில் செலவழிக்கும் போது அனியாயத்துக்கு பம்முவது.
3. தொடர்ந்தாப்லெ பல வருசம் "விசா வருது"னு வாய்கூசாமெ பொய்சொல்றது.
4. சொல்லிவைத்தமாதிரி 3, 4 பேருக்கு ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து எதையும் சரியான நேரத்தில் செய்யாமல் தன்னை தவிர எல்லாரையும்/எல்லாவிசயங்களையும் காரணமாக சொல்வது
5. சின்னபிள்ளைகளுக்கு கொடுக்காமல் [அல்லது பார்க்கவைத்து] தீனியை நாகரிகம் இல்லாமல் [ஒலப்பி] சாப்பிடுவது.
6. சமயங்களில் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மிடமே பணம் வாங்கியவர்கள் கொஞ்சம் நாள் பார்க்காவிட்டால் , திடீரென்று பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் போது போடும் டிராமா எல்லா சீரியலையும் வென்றுவிடும்.இதே வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் பெரும்பாலும் காந்திகணக்குதான்.
தெரிந்தவர்கள் இன்னும் எழுதவும் ....இதுவும் ஒரு “மற்றவர்களை அறியும் அறிவு” தானே!!
ZAKIR HUSSAIN






