Friday, February 6, 2009

விதைகள்

கருவாகி உருவாகி வளர விதை;
பருகும் பழமுண்டாக விதை;
கவிஞனின் கற்பனை விதை;
க"விதை" என்பதும் அதனாலே..!
விதை ஓர் ஒப்பற்ற ஆசான்;
அதைக் கொண்டு பாடம் பெறலாம்
வீரியமுள்ள விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...!
விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்;
எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்..
கணிணி முதல் கைப்பேசி வரை
அனைத்திலும் ஆதாரப் பொருள்
விதை வடிவமே..............
விதையே நீ வாழ்க! வளர்க!!!!!

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்"
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "விதைகள்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?