Saturday, February 28, 2009

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹு.....
 
 
உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

 

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
 
 
அதிரை‍‍ : அபூசுமையா. ஜித்தாவிலிருந்து.

read more...

Friday, February 27, 2009

பொட்டி தூக்கும் பொழப்பு...


பொட்டி தூக்கும் பொழப்பு...

இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ போர்ட்டரை பற்றி ..என நினைத்தால் "நீங்கள் பரிசைப்பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள்...இதற்காக Clue வெல்லாம் கேட்காதீர்கள்... நேராக விசயத்துக்கு வருவோம்

இது அதிராம்பட்டினம் மக்களுக்கு மட்டும் அல்ல ..பக்கத்தில் வாழும் பல முஸ்லீம் குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு விதமான அநீதி.

இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று இந்த சொந்தபந்தங்களுக்கு காட்ட மனதுக்குள் சவால்களை சவ அடக்கம் செய்த பலரின் மனக்குமுறல்.

வெளிநாட்டில் உள்ளவர்களின் வாழ்கை இப்படித்தான் ஆகி விட்டது. சம்பாதிக்கும் காலங்களில் வீட்டில் இவர்களூக்கு பிடிக்கும், அவர்களூக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிய துணிமணிகள், வாட்ச், சென்ட் இவற்றை கொண்டு சென்று சேர்க்க காண்பித்த ஆர்வம் ...தனது முதுமையை பார்க்க முக்கியத்துவம் தரவில்லை.

விரல் விட்டு [அல்லது விரல் விடாமல்] எண்ணக்கூடிய சிலபேரைத்தவிர நிறைய பேர் நமதூரில் மானத்துக்கு அஞ்சி மெளனமாக தன் வறுமையை மறைப்பதை நான் பார்த்திருக்கிறேன்

ஏன் இந்த சமுதாயம் இப்படி வெளிநாட்டில் கடுங்குளிரிலும் [ சமயங்களில் மைனஸ் டிகிரியில்] கடும் வெயிலிலும் [உம்ரா போனபோது ஒரு 10 ஹேர்ட்ரய்யரை முகத்துக்கு நேராக பிடித்தது போல் உணர்ந்தேன்]..இப்படி கஷ்டப்படுகிற சமுதாயமாக மாற்றப்பட்டது என்று பார்த்தால், அந்த உண்மைக்கு பின்னால் பலர் காரணம் என எனக்கு தோன்றுகிறது.

இது காலாகாலமாக வெளிநாட்டில் குப்பை கொட்டும் நம்மடவர்களைப்பற்றிய சிந்தனை. ஏன் இப்படி'பொட்டி தூக்கும்" என்று எழுதினேன் என்றால்..அப்படித்தான் போய்விட்டது நம் வாழ்க்கை. ஊருக்கு போகும்போது பார்த்து, பார்த்து வாங்குவது..சாப்பிடாமல், ஒரு கையில் செல்போன், மறு கையில் தன்னை உருக்கி சம்பாதித்த பணம்..பொருள்களை கட்டி அடுக்கியபின் வரும் கலைப்பு[முன்பெல்லாம்..ஊர்த்தபால் தான் ரெபரென்ஸ்]

இப்போது நம் ஊர் மக்கள் அமெரிக்கா, லண்டன், ஜப்பான் என்று சிறகுவிரித்தாகிவிட்டது. ஆனால் இவர்கள் மலேசியா,துபாய், சவூதி போன்ற நாட்டில் இருக்கும் நம் ஊர்காரர்களுக்கும் இவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு காண்பிக்கவில்லை.
  1. திருநெல்வேலி மாவட்டங்களில் windmill பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து கொஞசம் டீசன்ட் வாழ்க்கை நடத்தும் மத்தியதர விவசாயமக்கள் ஏன் வெளிநாட்டை நம்பவில்லை. ?
  2. வேற்று இனத்தவர்கள் எப்படி தொடர்ந்து அரசு வேலைகளில் 2, 3 சந்ததியினர் என தொடர முடிகிறது..?
  3. ஒரு சின்ன தோப்பு / ஒன்றிரண்டு குடும்ப கல்யாணம் / இடையில் வரும் மருத்துவ செலவுக்குள் மட்டும் எப்படி என் ஊர்மக்கள் நொந்து போகிறார்கள்?
என்ற சில கேள்விகளை முன்னிருத்தி இப்போது விடை பெறுகிறேன்..

பகுதி 2 ல் சந்திக்கும் வரை ஒருசின்ன BREAK !!!!!!

ZAKIR HUSSAIN
read more...

Smart Thoughts


Don't compare yourself with any one in this world.

If you compare, you are insulting yourself.

Don't complain about others;

change yourself if you want peace.

It is easier to protect your feet with slippers than

to cover the earth with carpet.

No one can go back and change a bad beginning,

but anyone can start now and create a successful ending.

Easy is to judge the mistakes of others.

Difficult is to recognize our own mistakes.

If a problem can be solved, no need to worry about it.

If a problem cannot be solved what is the use of worrying?

'Changing the Face' can change nothing.

But 'Facing the Change' can change everything.

Be bold when you loose

and be calm when you win.

No one will manufacture a lock without a key.

Trust that God created solutions for all problems we meet.

Every successful person has a painful story.

Every painful story has a successful ending.

Accept the pain and get ready for success.

Heated gold becomes ornament. Beaten copper becomes wires. Depleted stone becomes statue.

So the more pain you get in life you become more valuable.

Mistakes are painful when they happen.

But year's later collection of mistakes is called experience, which leads to success.

Life laughs at you when you are unhappy...

Life smiles at you when you are happy...

Life salutes you when you make others happy...

If you miss an opportunity don't fill your eyes with tears.

Tears may hide another better opportunity in front of you.


If you keep doing what you have always done, you will keep getting what you have always gotten.

For things to change, you have to change. For things to get better, you have to get better.


read more...

எது வேண்டும் சொல் மனமே - 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .

அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?

உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.

எப்படி? மேற்கொண்டு படியுங்கள் .

உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:

ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?

தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?

நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?

இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி?

நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .

டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.

இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.

சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இதோ ஓர் உதாரணம்:

காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்ட, அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ் .

நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது.

ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.

நீங்கள் சபிப்பீர்கள்.
தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...

மகள் அழத் தொடங்குவாள்....
அடுத்ததாக, தேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .

அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.

மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் .

இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .

அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.

பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .

அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .

இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று.

உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .

மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்?

காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.

இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?

அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?

ஆ) தங்களின் அருமை மகளா?

இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?

ஈ) நீங்கள்தான் காரணமா ?

சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !

அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?

இதோ இப்படி:

தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.

அருமை மகள் அழப் போகிறாள்.

நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் .

அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !

வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள்.

மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .

ஏன்?

காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.

நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .

ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான்.

இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:

* யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .

அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.

தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

* உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?

உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?

உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?

முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?

பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?

உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.

90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்

* உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.

மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

* விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .

அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.

அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.

நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!

இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.

அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!

இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.

90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.

கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .

அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.

நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

ஆங்கில மூலம் : ஸ்டீபன் கோவே.

தமிழாக்கம் : அபூ அய்ன
read more...

Thursday, February 26, 2009

Miracles of Alkalizing Diet

The human body is composed of various organs and parts, which are made up of tissues and cells. These tissues and cells are composed of 16 chemical elements.

The balance or equilibrium of these chemical elements in the body is an essential factor in the maintenance of health and healing of disease. The acid-alkaline balance plays a vital role in this balanced body chemistry. All foods, after digestion and absorption leave either an acid or alkaline ash in the body depending on their mineral composition. The normal body chemistry is approximately 20 per cent acid and 80 per cent alkaline. This is the acid-alkaline balance.

In normal health, the reaction of the blood is alkaline and that is essential for our physical and mental well-being. The preponderence of alkalis in the blood is due to the fact that the products of the vital combustions taking place in the body are mostly acid in character. Carbohydrates and fats form about nine-tenths of the normal fuel of the body. IN normal health, this great mass of material is converted into carbon dioxide gas and water. Half of the remaining one-tenth fuel is also con- verted into the same gas and water. This huge amount of acid is transported by the blood to the various points of discharge, mainly the lungs. By virtue of alkalinity, the blood is able to transport the acid from the tissues to the discharge points.

Acidosis

Whenever the alkalinity of the blood is reduced, even slightly, its ability to transport the carbon dioxide gets reduced. This results in the accumulation of acid in the tissues. This condition is known as acidosis or hypo-alkalinity of the blood. Its symptoms are hunger, indigestion, burning sensation and pain in the pharynx, nausea, vomiting, headache, various nervous disorders and drowsiness. Acidosis is the breeding ground for most diseases. Nepthritis or Bright’s disease, rheumatism, premature old age, arteriosclerosis, high blood pressure, skin disorders and various degenerative diseases are traceable to this condition. It seriously interferes with the functions of the glands and organs of the body. It also lowers the vitality of the system, thereby increasing the danger of infectious diseases.

The main cause of acidosis or hypo-alkalinity of the blood is faulty diet, in which too many acid forming foods have been consumed. In the normal process of metabolism or converting the food into energy by the body,. various acids are formed in the system and in addition, other acids are introduced in food. Whenever there is substantial increase in the formation of acids in the system and these acids are not properly eliminated through the lungs, the kidneys and the bowels , the alkalinity of the blood is reduced, resulting in acidosis.

Other causes of acidosis are depletion of alkali reserve due to diarrhoea, dysentery, cholera etc., accumulation of carbon dioxide in asphyxia and anoxia as in circulatory and pulmonary diseases and accumulation of acetone bodies resulting from starvation, vomiting and diabetes millitus.

Acidosis can be prevented by maintaining a proper ratio between acid and alkaline foods in the diet. Certain foods leave alkaline ash and help in maintaining the alkalinity of the food, while others leave highly acid ash and lower the alkali reserve of the blood and tissue fluids to a very large extent. Eggs do the same but less strongly than meats. Cereals of all kinds, including all sorts of breads are also acid-forming foods , though much less than meats. All fruits, with exceptions like plums and prunes and all green and root vegetables are highly alkaline foods and help to alkalinize the blood and other tissue fluids.

Thus , our daily diet should consist of four-fifth of alkaline-forming foods such as juicy fruits, tubers, legumes, ripe fruits, leafy and root vegetables and one fifty of acid-forming foods containing concentrated proteins and starches such as meat, fish, bread and cereals. Eating sensibly in this manner will ensure the necessary alkalinity of the food which will keep the body in perfect health.

Whenever a person has acidosis, the higher the ratio of alkaline forming foods in his diet, the quicker will be the recovery. Acids are neutralised by alkalies. It is, therefore, imperative that persons suffering from various ailments are given adequate alkaline ash foods to offset the effects of acid-forming foods and leave a safe margin of alkalinity.

The most agreeable and convenient means of alkalizing the blood are citrus fruits and fruit juices. The alkalizing value of citrus fruits are due to large percentage of alkaline salts, mainly potash, which they contain. Each pint of orange juice contains 12 grains of potassium, one of the most potent of alkalis. Lemon juice contains nine grains of the alkali to the pint and grape seven grains.

Diet in Disease

In the diet during disease, breakfast may consist of fresh fruits, lunch may comprise raw vegetables with acid and sub-acid fruits, and for dinner raw and cooked vegetables, or light starchy vegetables like beet, carrot, cauliflower, egg-plant and squashes may be taken. Sweet fruits may be added to this diet after seven days.

Foods are classified as acid-producing or alkaline-producing depending on their reaction on the urine. Calcium, magnesium, sodium and potassium present in foods contribute to the alkaline effect, while sulphur, phosphorous and chlorine contribute to the acidic effect. Depending on the pre-dominating constituents in a particular food, it is classified as acid-forming or alkaline-forming.

The effect of food stuffs upon the alkalinity of the blood depends upon their residue which they leave behind after undergoing oxidation in the body. It is an error to presume that because a food tastes acid, it has an acidic reaction in the blood. For instance, fruits and vegetables have organic acids in combination with soda and potash in the form of acid salts. When the acids are burnt or utilised in the body, the alkaline soda or potash is left behind. Hence the effect of the natural fruit acids is to increase the alkalinity of the blood rather than reduce it.

Based on the above observations, the following charts show the common foods with acid and alkaline ash :
























































































































A - Foods Leaving An Acid Ash

(One-Fifth Class)
Barley Eggs
Bananas (unripe)Grain Foods
BeansLentils
BreadMeats
CerealsNuts except almonds
CakesOatmeal
ChickenPeas
ConfectionsRice
CornSugar
ChorolateSea Foods
CoffeeTea
B - Foods Leaving An Alkaline Ash

( Four-fifths class )
AlmondsMelons
ApplesMilk
ApricotsOnions
Banana (ripe)Oranges
BeetsParsley
CabbagePeaches
CarrotsPears
CauliflowerPineapple
CeleryPotatoes
CoconutsPumpkins

Cottage Cheese
Radishes
Cucumbers
Dates Spinach
Figs ( Fresh and Dry)Soyabeans
GrapesTomatoes

Lemons

Lettuce
Turnips


read more...

Attn:Dubai User

Asalamu allaikum

Message for ETISALAT Mobile Phone Users

Call India for 99 fils per minute, valid till April 02,2009.

SMS e india99 to 1010 now for free registration.

Jahangir.A.,
Federal Electricity and Water Authority.,
Dubai.,U.A.E.,
Phone :00971 50 2512378.
Thanks Muduvai Hidayath
read more...

Tuesday, February 24, 2009

போலி வாழ்க்கை

நரைத்து விட்ட
ஞாபகத்தின்

நாடி தொட்டுப் பார்க்கிறேன்..


நேற்று வரை

நடந்து வந்த

கால்தடத்தைப் பார்க்கிறேன்..


வேதனைகள்

சோதனைகள்

வித விதமாய்ப் பார்க்கிறேன்..


வானில் மட்டும்

அதே

ஓவியங்கள்

வியப்புடனே பார்க்கிறேன்..!


வாழ்ந்த வரை

வாழ்க்கை எங்கே

தேடித் தேடிப் பார்க்கிறேன்..


கால் தடுக்கி

விழுந்த இடம்

காணவில்லை வேர்க்கிறேன்...!


சிரிப்பொலிகள்

அழுகுரல்கள்

காதில் விழக் கேட்கிறேன்..


நியாயமில்லா

வாழ்க்கை தன்னை

நினைத்து நினைத்துப்

பார்க்கிறேன்..!


நாணயமே இல்லாதார்

பை நிறைய

நாணயம்..


நாணயமாய் வாழ்பவனை

நகைக்கிறது

ஆணவம்...!


பொதுநலத்தின்

பின்னணியில்

சுயநலத்தின் சுவடுகள்..


சுய நலத்தின்

கௌரவத்தில்

சோரம் போன கொள்கைகள்..!


உலக மகா

தத்துவங்கள்

உரக்க உரக்க பேசுவார்..


ஒன்றிரண்டை

தப்பித்தவறி

ஒப்புவித்தால் ஏசுவார்..!!


தனக்கென்றால்

தலைவலி..

அதுவே பிறர்க்கு

தலைவிதி..!!!


-K.கிருஷ்ணமூர்த்தி, Malaysia
read more...

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்



ஏகஇறைவனின் திருப்பெயரால்...

எங்கே செல்லும் இந்தப் பாதை ???

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !

ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு

சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக்
கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.

முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.

அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ?

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !

இன உணர்வு கொள்வதை இஸ்லாம் வெறுப்பதால் அவரை முஸ்லீம் என்றுப் பாராமல் ஒரு இந்தியனுக்கு கிடைத்தது என்று (சினிமப் பிரியர்கள் முஸ்லீம்களிலும் இருப்பதால்) பெருமைப பட்டுக் கொண்டால் நாம் இதை எழுதப் போவதில்லை.

இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590

அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருதுபெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை.

நமக்குப் பெருமையா ?

நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பாளர்: யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)

அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?

சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.

ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.

பாடலில் வரக்கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,

வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.

அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )

வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.

ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) .

ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'. அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


read more...

Monday, February 23, 2009

Scan Centres in Chennai

AJ Diagnostic
CentreAddress:
23, Srinivasa Ragahavan Road,
New Perungalathur,
Chennai.
Phone : +91-44-22393191

--------------------------
Anna Diagnostic Center
Address:
11, Bajanai Koil Street,
Choolaimedu,
Chennai.
Phone : +91-44-23615001
-------------------------------
Bharat Scans
Address:
Royapettah
197, Peters Road,
Royapettah, Chennai - 600 014.
Phone : +91-44-28418334 / 35 / 36 / 37, 9841059900, 9841449507, 9841063666, 9841049507

Anna Nagar
Anna Nagar, Chennai - 600 040.
Phone : +91-44-26267000

Ashok Nagar
Ashok Nagar, Chennai.
Phone : +91-44-24894677

Guindy
Guindy, Chennai.
Phone : +91-44-22500400
---------------------------------

Cancan Centre
Address:
58, OMH Tower,
East Coast Road,
Thiruvanmiyur, Chennai - 600 014.
Phone : +91-44-24983221, 9841025693
-----------------------------------------
CT Scan Center
Address:
9, 15th Street,
Tansi Nagar,Velachery, Chennai.
Phone : +91-44-22432879, 9884021045
------------------------------------------
Gopi Diagnostic Centre
Address:
Old-77, New-165,
Eldams Road,Teynampet,
Chennai.
Phone : +91-44-42110331, 9382714030
----------------------------------------------
Guru Diagnostic Centre
Address:
5/3, Renganathan Street,
Triplicane, Chennai.
Phone : +91-44-28594827
------------------------------------------------
Hi Beam Scan Centre
Address:
56, Arathoon Road,
Royapuram, Chennai.
Phone : +91-44-25981538, 9841971374
-----------------------------------------------------
இன்று சேகரிக்கத்தவரை கொடுத்துள்ளேன்,மற்றவை நாளைத் தொடரும்
read more...

முல்லவின் கதைகள்-அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர்.குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார்.அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர்.இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே. இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார்.வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர்.உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர்.உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர்.அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர்.உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர்.பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர்.அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார்.வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு ? என்று கேட்டனர்.முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.
read more...

முல்லவின் கதைகள்-சூரியனா-சந்திரனா

அறிர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.அவர் உடனே எழுந்து அறிர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா? என்று கேட்டார்.இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர்.சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிர்கள் கேட்டனர்.பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.
read more...

" ஊனம்"

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்
ஞானமற்ற மனிதா...!
நீயும் ஒரு நாளில் நிலத்தில்
சாயும் வேளையில்
உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!
உடல் முழுதும் செயலற்று
கிடக்கும்;"ஊனமுற்ற"நிலையே
கிடைக்கும்....


வேதத்தைக் காணாத கண்கள்;
ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;
உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..

அகம்பாவம் நிறைந்ததால்,
அகம்- பாவத்தில் உறைந்ததால்;
சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து
சுகம் தேடவேயில்லையே...!!

கருவறையே உலகமென்று
கருதியே சயனித்திருந்தாய்,
ஓருலகில் வந்து உதிப்பாயென்று
ஒருபோதும் நினைக்காதது போலவே;
மறு உலகம் உண்டென்பதை
மறந்து விட்டாய் மனமே..!

இரணமும்; மரணமும்
இரகசியமாய்த் தான்
இறைவனும் வைத்து விட்டான்;
இரண்டையும் நோக்கியே
இரவும் பகலும் பயணிக்கின்றோம்......

இரணத்தின் முடிவு;
மரணத்தின் துவக்கம்


சென்ற நிமிடம்-
நின்று பேசியவர்கள்
சென்ற இடம் எங்கே?
சென்று பார்த்து வா;
நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)

ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை
நன்றாக உருவமமைத்த இறைவனே
ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்
ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்
உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே "ஊனமுற்றவை".........

="கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
read more...

Sunday, February 22, 2009

Useful Links : Blood bank in Chennai

Bull's Eye Blood Bank

Address:

1, Lakshmi Street, Flowers Road, Chennai-84.
Phone : +91-44-2642134

--------------------------------
C.P.J.M. Blood Bureau

Address:

35, Raghunaikulu Street, Chennai-3.
Phone : +91-44-25354096

------------------------------------
Dhanvandri Blood Bank

Address:

F1,52-A, South West Boag Road, T. Nagar, Chennai-17.
Phone : +91-44-24310660
---------------------------------------------

Dr Anjaneya Blood Bank & Component Centre

Address:

2, Alayamman Koil Street, Teynampet, Chennai-18.
Phone : +91-44-24333754
------------------------------------

Holy Laboratory Services

Address:

133, New 126, Arcot Road, Chennai-87.
Phone : +91-44-24861145
------------------------------
K J Hospital 24 Hour Blood Bank

Address:

3182, P.H. Road, Chennai-84.
Phone : +91-44-26411513
----------------------------------
LLMRF Public Charitable Trust Blood Bank

Address:

160, Poonamalle High Road, Chennai-10.
Phone : +91-44-28283096
-------------------------------------------
Sree Aurobindo Blood Bank & Blood Components Research Centre

Address:

168/1, P.H. Road, Kilpauk, Chennai-10.
Phone : +91-44-28261712
---------------------------------------------------
The Madras Voluntary Blood Bank

Address:

6, Cathedral Road, Gopalapuram, Chennai-86.
Phone : +91-44-28113176
-------------------------------------------------
read more...

A glimpse at the life of ‘Umar Ibn Al-Khattaab

When this religion was revealed and the Prophet taught it and raised people according to its instructions, it delivered brilliant men and women who illuminated history and were esteemed by Muslims and non-Muslims alike.

This religion produced such people who upheld its exalted standards and applied its edicts all over the world. As such, they came to be beacons of guidance for everyone who followed their example.

Why do we read about the lives of the Companions and the Predecessors?
We owe it to these great individuals to acquaint ourselves with their biographies and relate their incidents for the following purposes:
First: To learn how magnificent this religion is, that it produced such individuals.
Second: To take our predecessors and leaders as role models, for they are beacons that guide us through the utter darkness. We need also to learn that such examples are reproducible, although to a lesser extent, should there exist the proper Islamic environment and upbringing that refine the characters of people, entrenches the correct belief and creed in them, and instils the ethics of the Prophet into their characters.

`Umar as a character:

`Umar Ibn Al-Khattaab was undoubtedly one of the outstandingly ideal characters that have been witnessed by Islamic history, which many people are negligent of.
Recalling the life of such characters reminds all those oblivious people who are infatuated by the stories of famous characters from the east and west, although a closer analysis of many of these characters reveals the opportunism, vice, consumption of intoxicants, adultery and fornication, profound injustice and tyranny that defines their lives. Conversely, the personalities and characters of the prominent pioneers of Islamic history are literally unmatched.
Before becoming a Muslim, `Umar would worship idols, bury his baby daughters alive, treat people unjustly, and commit other foul acts, particularly if it was against Muslims. Sa'eed Ibn Zayd said: "I swear by Allaah that I went through times when 'Umar would shackle both myself and his own sister (who was Sa'eed’s wife) to force us out of Islam, but then he himself became a Muslim."
By the will of Allaah, `Umar transformed from being a disbeliever living a life of pre-Islamic ignorance, into a guided Muslim, and thus his character soared towards excellence. Some of the sayings of the Prophet referring to the life of this man will be mentioned later, which will highlight a number of magnificent aspects of his character.

The story of how he embraced Islam:

The Muslims did not believe that `Umar could ever become a Muslim. Umm ‘Abdullaah bint Abu Huthmah said: “While we were preparing to emigrate to Habashsah (i.e. Ethiopia), `Umar came, and he would inflict great harm upon us Muslims. When he saw us preparing to leave, he came and said to me: 'O Umm ‘Abdullaah! Are you preparing to set off?' I replied: `Yes! I swear by Allaah! We leave and travel in the land of Allaah, as you have afflicted much torture upon us.` He said: `May Allaah be with you in company.` I noticed that his position had softened in this conversation, and perceived that he was saddened by what we were having to endure. I said to my husband, `You should have seen `Umar - how sad he looked and how soft he was in his tone.' My husband replied: `Are you hoping he becomes a Muslim?` I said: `Yes.` He said: `If this man’s donkey were to become a Muslim, perhaps then he would embrace Islam.`” He said this because he had given up all hope of `Umar becoming Muslim due to his harsh and aggressive stance against the Muslims.

However, when Allaah wills guidance for someone, He facilitates the means for his guidance, even if such a person has the hardest heart on earth and is the furthest from Allaah. This is a lesson for all those who call others to Islam to never despair or give up on people, regardless of how harsh they may be. When Allaah wills goodness for someone, He will facilitate for him the means of guidance.

The fact that `Umar embraced Islam represented a great victory for the Muslims.

His embracing of Islam was no secret:
‘Abdullaah Ibn ‘Umar and his father, narrated the story of his father’s Islam saying: “When he embraced Islam, he enquired: `Which person amongst the tribe of Quraysh conveys news the fastest and spreads rumours the most?` He was informed that it was a man named Jameel Ibn Ma’mar Al-Jumahi. He went looking for him, and I followed my father. When he saw him, he asked him: `O Jameel! Do you not know that I have embraced Islam and joined the religion of Muhammad?` Jameel did not even bother asking him to repeat or to confirm what he had just said, but rather, he immediately got up and set off; my father followed him with me behind him. As soon as Jameel reached the area of the Haram (i.e. the Ka’bah) he shouted at the top of his voice: `O Quraysh! Know that `Umar has become a Saabi (a derogatory term used by Quraysh to describe one who had become a Muslim).' ‘Umar shouted from behind: `You lied! I have become a Muslim and testified that none has the right to be worshipped except Allaah and that Muhammad is His Slave and Messenger…`”

He proclaimed it openly due to the might that he had in his heart. This defines his courageous personality.

Returning to the story: “…The Quraysh approached my father, wishing to warn him, so he began fighting them, all, until noon. At that time he was exhausted, so he sat down and said to them: `Do whatever you wish. ` They continued to beat him until an old man from their tribe named ‘Aas Ibn Waa’il came and stopped them.”

It was only after `Umar became Muslim that the Muslims could openly circumambulate the Ka’bah. Indeed Allaah granted the Muslims might through his coming to Islam .
read more...

Saturday, February 21, 2009

சோர்ந்து போகாமல் உற்சாகப்படுத்துங்கள்!

பெற்றோருக்கான டிப்ஸ்... தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.

கலை, ஓவியம், விளையாட்டு போன்ற வற்றில் உங்கள் பிள் ளையின் கவனம் சிதறலாம். நீங்கள் தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.வழக்கத்தை விட அதிக, "ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவர்.

எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள்(வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தரவல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட் டால், "இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே' என்று புலம்ப வேண்டாம். "முதல்ல ரெஸ்ட் எடு; உடம்பு சரியான பிறகு படிச்சுக் கலாம்' என்று சொல்லுங்கள்.படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட் கார்ந்து கொண்டு, "அதை முடிச்சிட்டியா? இது தானே படிக்கிற?' என்றெல்லாம் கேட்ப தை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு, "கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.நீங்களும், வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும், நம்பிக்கை வார்த்தைகளும் தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர் களை உற்சாகப் படுத்துங்கள்.
read more...

Friday, February 20, 2009

How To Convert Microsoft Word Documents to PDF Files Online

It's no more required to install software on your computer to freely convert Microsoft Word documents to Acrobat Reader PDF files. Many free services are available online that convert Word to PDF quickly. The output PDF file will look exactly like your source document retaining all the text formatting, colours and images.

One of the best free online services that converts Word to PDF file format is Google Docs. Let see how to use Google Docs

Using Google Docs To Convert Word to PDF

Google Docs, the online word processing and spreadsheet from Google is rapidly eating Microsoft Office share. This online service has a nice feature that allows us to upload word documents and download them as PDF files. Here is the step-by-step guide for conversion

1. Login to Google Docs service using your Google Account

2. Click on the Upload link

Converting-MS-Word-To-PDF-Online-Image2

3. Use the Browse button to locate the source Word document that you want to convert to PDF

Converting-MS-Word-To-PDF-Online-Image2

4. Upload the source Word document by clicking on Upload File. Wait till Google Docs completes uploading and opens the document(this operation takes few seconds depending on your Internet speed and size of source word document).

5. Select the option File --> Download the file as... --> PDF and choose the location where you want to save the converted PDF document

Converting-MS-Word-To-PDF-Online-Image3

If you are interested to install free software that converts virtually any file to PDF use Cute PDF or for other way conversion(PDF-Word) use this application.

read more...

சிந்திக்க மறந்த என்னவனே!

ஏ மனிதனே..
என் இனத்தவனே..
சிரிக்கத் தெரிந்த நீ..
ஏன் சிந்திப்பதே இல்லை?!

இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!

அழகாய்
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் தேயும் நிலவு போல..

உயரே
பறந்து பறந்து
தரைக்கு இரங்கும்
பருந்து போல..

கடலில்..
புரண்டு, எழுந்து, பின்
ஒடுங்கி விழும்
அலையைப் போல..

மண்ணில்..
பிறந்து வளர்ந்து..
மண்ணோடு மண்ணாவதுதானா
மனித இயல்பு??!

மனிதா..

உன் செவிகளை கொஞ்சம்
என் பக்கம் வை..

நிலவுக்குச்
சரித்திரம் தேவை இல்லை..

பருந்துக்கு
பணங்காசு தேவை இல்லை..

அலைகள்
புகழைத் தேடுவதே இல்லை..!

மனிதா,
நீ மட்டும் ஏன்..
நில்லாமல் ஓடுகின்றாய்?
நிலையில்லா செல்வம் தேடுகின்றாய்..?
நிம்மதி இன்றி வாடுகின்றாய்???

கொஞ்சம் பொறு!

ஒரு மேட்டை இடித்தால்தான்
ஒரு நாட்டை ஆக்க முடியுமா?

ஒரு காட்டை அழித்தால்தான்
உன் வீட்டை எழுப்ப இயலுமா??

ஓர் உயிரை
கொன்றால்தான்..
உன் வயிறு நிரம்புமா???

அடுத்தவன் அழிவில்தான்..
நீ,
வாழ்ந்தாக வேண்டுமா..?

நீ..
பகுத்தறிவு படைத்தவன்..
மறந்து விடாதே!

தன்னை வருத்தி..
பிறர்க்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியை
படைத்ததும் நீ தானே..!

அதன் மேன்மை
விளங்கவில்லையா
உனக்கு?

யோசி..

விண்ணில் எழும் கதிரவனால்
ஊருக்கு நன்மை..

மண்ணில் விழும் மழைத்துளியால்
வேருக்கு நன்மை..

பெண்ணுள் இருக்கும் பொறுமையினால்
ஊருக்கு நன்மை..

உன்னுள் உறங்கும் திறமையினால்
யாருக்கு நன்மை??

நில்...!

பேசு..
மென்மையாக பேசு..
உண்மையே பேசு..

பொழுதுக்களை
பழுதாக்கியே
பழக்கப் பட்டவனா நீ?

இனியொரு விதி செய்..

ஊறார் குறையை
உளவு பார்ப்பதைவிட..
உன் குறை எதுவென்று
யோசி!

கடைசியாக ஒன்று..

உன் இனத்தால்
நீ வாழ்ந்தது போதும்...

இனியாவது..

உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!

-கிருஷ்ணமூர்த்தி, Malaysia
read more...

யார் நீ..?!

நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

-கிருஷ்ணமூர்த்தி, Malaysia
read more...

விளக்கங்கள் அளித்தாலே பிரச்சனைகள் தீர்க்க முடியும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹு...

சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது 'யாருக்கோ நடந்த சம்பவம் தானே' என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை. னால், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்க கூடிய விதத்தில் இப்போது இச்சம்பவங்கள் அதிகமாக நம் சமூகத்தில் நடந்து கொண்டிருகின்றது. அவற்றைத் தடுப்பதற்காக நாமே சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமே.

நம் சமூகத்தில் சிறுமிகள்தான் பாலியல் கொடுமைக்கு மிகுதியாக ஆளாகின்றனர். அதேபோல், சிறுவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமால் இல்லை.
பாலியல் பற்றிய அடிப்படைக் கல்வியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை. ஏனென்றால், வெளியாட்கள் குழந்தைகளுடைய அறியாமையை பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக, வீட்டிலுள்ள டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், வெளியிலுள்ள தெரிந்தவர்கள், வீட்டுக்கு வருகின்ற சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து தான் குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் ஏற்படுகின்றது.

அதனால் குழந்தைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறான காரியம் செய்பவர்களிடம் இருந்து எவ்வாறு சிக்காமல் இருப்பது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான்.
குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க, குழந்தைகளுடைய சந்தேகங்களை பெற்றோர்களே அவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைப்பதே நல்லது.

அதைப் பற்றிய தேவையான விவரங்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்திக் கொள்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளுடைய சந்தேகங்களை அலட்சியப்படுத்தி ஒதுங்குவது நல்லதல்ல. அவர்களுடைய வயதுக்கேற்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கலாம்.
அம்மாவை அப்பா தொடுவது சகஜம். ஆனால், வேரு யாருக்கும் அதற்கான உரிமை கொடுக்கப்படவில்லை என்று சொல்லும்போது, குழந்தைகளுடைய மனதில் பாலியல் ரீதியான முதல் கேள்வி பதிகின்றது.

யாரையும் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் ஸ்பரிசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும்.
வேகமாக வசீகரிக்க முடிகின்ற இறைதான் குழந்தைகள். போலியான அன்பை யார் காட்டினாலும், அதை ஒதிக்கிகொள்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நமக்குப் பிடித்த உணவு, மொபைல் போன் போன்ற பொருட்களை பழக்கமில்லாதவர்கள் பரிசாக தருவார்கள் என்று குழந்தைகள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தையின் கையில் வீட்டுக்கு தெரியாத எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அது எங்கிருந்து கிடைத்தது என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும்.

தங்களது குழந்தையின் நண்பர்கள் யாரெல்லாம் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் போகமாட்டேன் என்று குழந்தை சொல்லும் போது, அதன் காரணம் என்னவென்று பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்டு தெரிந்திருக்க வேண்டும். படிப்பதற்கு விருப்பமில்லாமல், அல்லது பள்ளியும் ஆசிரியரும் பிடிக்காமல் இருக்கலாம் என்று நாமே யோசித்து முடிவெடுப்பது பல நேரங்களில் சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டால், அதைக் நேராக நம்மிடம் சொல்ல குழந்தைகள் தயங்குவார்கள். இதனால், குழந்தைகளுக்கு பல மாற்றங்கள் மனதளவிலும் உடலளவிலும் உண்டாகின்றன. அதை அவர்கள் தங்களது வழக்கத்துக்கு மாறான செய்கைகளால்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த நேரங்களில் குழந்தைகள் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்; சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள்; காரணமில்லாமல் அதிர்ச்சி அடைவது, சாப்பிடுவதில் வெறுப்பு... இப்படி குழந்தைகளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தால், அதற்கான காரணம் என்னவென்று தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

வீட்டில் பெற்றோர்களுடனோ, பெரியவர்களுடனோ தங்களுடைய எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரம் குழந்தைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

பாலியல் கொடுமைக்கு ஆளான விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எவரேனும் பயப்படுத்தி வைத்திருந்தாலும், அதை பெற்றோர்களிடம் தைரியமாக சொல்வதற்கான சுதந்திரம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் ஆடை அணிவிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு ஸ்லீவ்லெஸ் அழகாக இருக்கலாம், ஆனால், குழந்தைகளுடைய மார்பு முழுவதும் தெரிகின்ற விதத்தில் ஆடைகள் அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். உடல் மறைத்துகொள்கின்ற மாதிரியான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவும்.

சொந்தக்காரராக இருந்தாலும், பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு போவதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. சொந்தக்காரராக இருந்தாலும் குழந்தைகளை அவர்களுடன் படுக்க அனுமதிக்க கூடாது.

குழந்தைகளோடு திறந்த மனதோடு பழகுவதே, அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற பிரச்சனைக்கு மிகவும் பயனான சிகிச்சை என்று உளவியல் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

செக்ஸ் முதல் எவ்விதமான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் கேட்டாலும், அதற்கு மனம் திறந்து இலகுவான விளக்கங்கள் அளித்தாலே பிரச்சனைகள் தீர்க்க முடியும். சிறார்களுக்கு அவர்களது வீடுதான் கவுன்சிலிங் சென்டர். அப்படியில்லாமல், சந்தேகம் கேட்கும் குழந்தைகளைத் திட்டுவது பாதக நிலைக்குத் தள்ளிவிடும்.

குடும்ப பொறுப்புகளை சுமந்து ஓடி உழைக்கின்ற பெற்றோர்களுக்கிடையே சொந்த வீட்டிலேயே குழந்தைகள் அனாதையாகின்றனர். இது, அவர்களது மனதை மிகவும் பாதிக்கிறது.

குழந்தைகளுக்குள்ளும் பிரச்சனைகள் புதைந்து கிடக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்து குழந்தைகளோடு நண்பர்களைப்போல் பழகுவதற்கும், அதோடு அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆளாகவும் பெற்றோர்களை முடியாமல் போகின்றது. இதன் விளைவாக குழந்தைகள் தவறான வழிகள் தேடி போகின்றார்கள்.

குழந்தைகள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வதென்றும், எப்படி பேசுவதென்றும் பெற்றோர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவர் தேவையில்லாமல் தவறான எண்ணத்துடன் உடம்பில் தொட்டால், அதை குழந்தையால் புரிந்து கொள்ள முடிய வேண்டும். அவர்களிடம் பார்வையாலும், தேவைப்பட்டால் எச்சரிகையாவும் பேச குழந்தைக்கு துணிச்சல் தர வேண்டும்.
குழந்தைகளை கொஞ்சுவதற்கும், அவர்களுடன் பேசுவதற்கும் பெற்றோர்கள் நேரம் காணவேண்டும். குழந்தைகளை கட்டித் தழுவ வேண்டும், அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களிலிடமிருந்து பராமரிப்பு கிடைக்கின்ற குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பாலியல் கொடுமைகள் நேர வாய்ப்புகள் இல்லை. தங்களை தேவையில்லாமல் தொட யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை!

Justify Full என் அருமை ம‌க‌னே! தொழுகையை நிலைநாட்டு! ந‌ன்மையை ஏவு! தீமையைத் த‌டு! உன‌க்கு ஏற்ப‌டுவ‌தைச் ச‌கித்துக் கொள்!
அது உறுதிமிக்க காரியமாகும். 31:17



உங்க‌ளின் ம‌க்க‌ட் செல்வ‌மும் பொருட் செல்வ‌மும் சோத‌னை என்ப‌தையும். அல்லாஹ்விட‌ம் ம‌க‌த்தான‌ கூலி உண்டு என்ப‌தையும் அறிந்து கொள்ளுங்கள்.8:28
நன்றி த‌மிழ் குர்ஆன் மொழிபெய‌ப்பு www.onlinepj.com
read more...

Thursday, February 19, 2009

தத்துவஞானியிடம் வேடிக்கை

முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.

ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமம்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார்.

உடனே அவர் எழுந்து தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா? என்று தத்துவஞானி கேட்டார்.

சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் என்றார் முல்லா.

என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் தத்துவ ஞானி கேட்டார்.

நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் என்றார்.

அதன் விளைவு என்ன? என்று தத்துவ ஞானி கேட்டார்

எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.
read more...

Wednesday, February 18, 2009

அறிவுப் புரட்சி ஓங்குக !

அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள் ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .
இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸ்லிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர் கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர் ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம் மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும் ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஒரு ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம் அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன பல்கலைக்கழகங்களில் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.
கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள் உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .
உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம் 10 சதவிகிதம் என கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !

நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள் தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள் ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் 2 முஸ்லிம் நீதிபதிகளே இருக்கிறார்கள் .
ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிக்கை ஆசிரியர் துணை ஆசிரியர் உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிக்கை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர் இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை வங்கிப் போன்ற துறைப் பணிகளிலே 2.2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர் அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களென சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர் 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.

கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர் பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும் கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டாமென அவர்களில் பலர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறி களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும் வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.

அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.

மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம் அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.

ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர் மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர் பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும் அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .

உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும் இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும் அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி .

ஒளிரட்டும் சமுதாயம்..
கூடட்டும் இறையருள்!

( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
read more...